நாடு நலிந்துகொண்டு வருகிறது என்ற தகவல் மனதை வாட்டியதால் விருப்பு வெறுப்பு இன்றி ரிடிஃப்.காம் வலைத் தளத்தில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். பெரும்பாலான கட்டுரைகள் மன்மோகன் சிங் ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டியிருந்தன. அநேகமாக எல்லாத் துறைகளிலுமே நாடு தோல்வியைச் சந்தித்திருக்கிறது. எங்குமே நிர்வாகத்தின் நலிவு மேலிடத்திலிருந்து தொடங்குகிறது என்று நிர்வாகவியல் அறிஞர் பீட்டர் ட்ரக்கர் சொன்னது மன்மோகன் சிங் போன்றவர்களின் ஆட்சியைப் பற்றித்தானோ என்று நினைக்க வேண்டி யிருக்கிறது. பலர் கைகொடுத்தால்தான் இன்று நாட்டைத் தூக்கி நிறுத்த முடியும். நோயின் காரணங்களைக் அதற்கு முன்பு கண்டுபிடிக்க வேண்டுமே.