இனியெல்லாம் காதல் மாயம்பறவைகள் அமரும் கிளைகள் போலவே காதலும்.. உதாரணம் சரியா? தெரியவில்லை… கிளைகளா? ஆம்! குச்சியின் மேல் அமரும் பறவையாய் சில நேரம்.. மரத்தின் ஆணி வேராய் இருக்கும் கிளையில் பறவையாய் சில நேரம்..காதலால் ஒருத்தி மனம் நொந்து இருக்க, காதல் என்று மற்றொருவளை தேடி செல்கிறான் இவன்.. காதலை உணராமல் காதலிக்க முடியுமா என்ன? வாய்ப்பில்லை தானே?.அதுவே தான் நிகழ்கிறது இவர்கள் மூவரின் வாழ்விலும்.. காதல் என்றவள் இல்லை என்றுவிட, அதிர்ச்சியானவன் தெளிந்தானா? உண்மை காதலை உணர்ந்தானா? உணர தான் வைத்தாளா? உணர வைத்தது என்னவோ காதல் தான்.இந்த முக்கோண காதலுக்கு சரியான பாதையை அமைத்துக் கொடுக்கவே வலம் வருகிறான் அந்த கண்ணபிரான்.. கண்ணன் தான்..