அமேசான் கிண்டிலில் நான் எழுதிய 42 நூல்கள் விற்பனைக்கும் வாசிப்புக்கும் உள்ளன. அவற்றில் 'காமம் பொல்லாதது' என்னும் நூலும் ஒன்று.
கடவுளின் 'இருப்பு', மூடநம்பிக்கைகள், வாழ்வியல் கதைகள் என்னும் பலதரப்பட்ட உள்ளடக்க நூல்களுக்கிடையே, மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் காம உணர்ச்சி குறித்த நூல் அதிக அளவில் வாசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.காரணம்.....
வேறு எந்தவொரு உணர்ச்சிக்கு உள்ளாகும்போதும் கிடைக்காத பேரானந்தம் இதைக் கையாளும்போது கிடைப்பதுதான். இதனால் பெறும் அளப்பரிய உடலுறவுச் சுகம்தான் ஆணையும் பெண்ணையும் இணையத் தூண்டுகிறது; இல்லற வாழ்வுக்கும் அடிகோலுகிறது.