என் உயிரின் ஜனனம் நீயடிதன் அத்தையின் கட்டாயத்தால் பிடிக்காத ஒருவனை மணமுடித்து விதவையாகி, சொந்த வீட்டிலேயே வேலைக்காரியாக்கப்பட்ட நாயகி. தன் தாய்மாமன் மகளை சிறுவயதில் இருந்தே விரும்பும் நாயகன், அவளின் ஆசைக்காக போலீஸ் ஆக, அவளை காண வந்தவன் அவளின் நிலை கண்டு துடித்துபோகிறான்.அவளின் மனதை மாற்றி திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வர, சில பிரச்சனைகள் எழுந்தாலும் தங்களின் வாழ்வை நன்முறையாக வாழ்கின்றனர். திடிரென ஒருநாள் அவனை விட்டு பிரிகிறாள்? அவள் எதற்காக அவனை பிரிந்து சென்றாள்? மீண்டும் இணைவார்களா? அவர்கள் பிரிந்ததற்கு காரணம் என்ன?...கதையின் போக்கில் அறிந்து கொள்வோம்.