Jump to ratings and reviews

Loading...

Rate this book

ஜீவனாம்சம்

Rate this book
ஒரு பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் செல்லப்பாவின் ஜீவனாம்சம் தமிழின் முக்கியமான நாவல். 1960-ல் வெளியான இந்நாவல் இன்று வாசிக்கும்போதும் ஜீவனுடன் இருப்பது வியக்கவைக்கிறது. மனித மனதின் போராட்டங்களை அவ்வளவு நுட்பமாகவும், தேர்ந்த மனோதத்துவ நிபுணரின் லாவகத்தோடும் நாவலில் கையாண்டிருக்கிறார் செல்லப்பா. மிகக் குறைந்த பாத்திரங்களைக் கொண்டு ஒரு அற்புதமான மனோ உலகத்தில் நம்மை சஞ்சரிக்க வைக்கிறார். உறவுகளத் தீர்மானிப்பது அன்பா அல்லது பொருளா என்ற சர்ச்சையை நம்முன் வைக்கிறார். வாழ்வில் புறவயமாக ஏற்படும் ஒரு சிக்கல் அகவயமாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதை மிகச்சிறப்பாக சித்தரித் திருக்கிறார். அடுத்தவர் சொல்லும் வார்த்தை அல்லது வாக்கியத்திலிருந்து அவர்களை அவதானிக்கும் கலையை நோ்த்தியோடும் ஆழ்ந்த புரிதல்களோடும் வெளிப்படுத் தியுள்ளார். மனித மனத்தின் ஆழத்தில் நுழைந்து செல்லும் ஆற்றல் அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. படிக்கும்போது மூளையில் ஏற்படும் லகரி, மனப்பாய்ச்சல் வார்த்தையில் சொல்லும் தரமன்று. செல்லப்பாவின் ஆகச்சிறந்த படைப்பு என்று ஜீவனாம்சத்தைச் சொல்லலாம்.


https://kesavamanitp.wordpress.com/20...

174 pages, Kindle Edition

Published January 1, 2006

Loading...
Loading...

About the author

C.S. Chellappa

76 books63 followers
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (48%)
4 stars
6 (22%)
3 stars
5 (18%)
2 stars
3 (11%)
1 star
0 (0%)

Loading...

Can't find what you're looking for?

Get help and learn more about the design.