நாசூக்காக வாழ்வது எப்படி? இரண்டாம் பாகம் நிறைய பக்கங்கள் - சுவாரசியமான கதைகள் - பயனுள்ள கருத்துகள்
தண்ணீர் இல்லாமல் ஒரு மனிதன் எப்படி வாழ முடியாதோ அது போல நாசூக்கு இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வது மிக கடினமான ஒன்றாக மாறிவிட்டது. நீரில் நீந்த பழகுவது போல் ஒருவன் நாசூக்காக பேச கற்றுக் கொள்ள வேண்டும்.
‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பார்கள். அவர்கள் குறிப்பிடுவது ‘நாசூக்கு’ எனும் பேசும் திறமையையே. வார்த்தைகளின் சக்தி எல்லை இல்லாதது. வலியில் இருக்கும் ஒருவரிடம் அன்பாக பேசிப் பாருங்கள். அதுவே அவருக்கு பெரும் மருந்தாக அமையும். அவர் எந்த தருணத்திலும் உங்களை மறக்க மாட்டார். ஒரு கணம் சிந்தித்து பேசுவதால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
நாசுக்காக வாழ்வது எப்படி என்பதை பற்றிய முதல் பாகம் மிகச் சிறப்பாக இருந்தது இரண்டாவது பாகம் நான் எதிர்பார்த்தபடி இல்லை . முதல் பாகத்தில் சாயல் சற்று உள்ளது