எரிச்சலான கதிர், “வர்ற கோபத்தில அடிச்சிடப் போறேன் சஹானா. வா போகலாம்” என கையைப் பிடித்து இழுக்க, அவள் அழுத்தமாக அதே இடத்திலேயே நின்று கொண்டாள். “என்னதாண்டி உன் பிரச்சனை?” என கடுப்பாகக் கேட்க, தன்னைப் பிடித்திருந்த கதிரின் கையை உதறியவள், “என்னை பார்க்கல, என் கூட பேசல, நான் உங்கள பார்க்க வந்தா, இப்படித்தான் கோவமா பேசுவீங்களா? நீங்க என்னை உண்மையிலேயே லவ் பண்றீங்களா? இல்லையா?” எனக் கேட்டு மீண்டும் அழுகைக்கு தயாரானாள். இடி இடித்து, சில தூறல்களும் விழ ஆரம்பிக்க, அவளை அழைத்துக் கொண்டு, அங்கிருந்த தோப்பு வீட்டிற்கு சென்றான். மழை நன்றாகப் பிடித்துக் கொண்டது. கதிர் பதட்டத்தில் இருந்தான். சஹானாவுக்கு பதட்டம் எல்லாம் இல்லை.