Jump to ratings and reviews
Rate this book

என்னைச் செதுக்கிய மாணவர்கள்

Rate this book
கல்வியை செதுக்கும் நூல் !

ஓவ்வொருவர் மனதிலும் கட்டாயம் ஒரு ஆசிரியராவது இருப்பார் . பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களிடமிருந்து நாம் எவ்வளவோ கற்றுக்கொள்வோம் . அது இயல்பானது . ஆனால் , மாணவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டேன் என்று ஒரு ஆசிரியர் பேசினால் எப்படியிருக்கும் ? அந்தப் புதுமையான முயற்சியின் விளைவுதான் உங்களின் கையில் இருக்கும் இந்த நூல்.

நாங்கள் கேட்டுக்கொண்டதைவிட சிறப்பாகக் கட்டுரைகளை எழுதித் தந்தார் ஆயிஷா நடராசன் . " என்னைச் செதுக்கிய மாணவர்கள் " என்ற பெயரில் இந்தத் தொடர் தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவரத் தொடங்கியது . " வெற்றிக்கொடி கட்டு ” இணைப்பிதழில் அது வந்தபோது வந்த எதிரொலிகள் நெகிழ்ச்சியானவை . 20 ஆண்டுகளுக்கு முன்பாகத் தன்னிடம் படித்த மாணவர்கள் தொடர்பான சம்பவங்களை அவர் பகிர்ந்துகொண்டார் . தமிழகத்திலும் வெளியிலும் இருந்த அவரது மாணவர்களையும் அவரையும் மறுபடியும் தி இந்து தமிழ் நாளிதழ் இணைத்தது . தங்களின் ஆசிரியர் தங்களை இன்னமும் நினைவு வைத்துள்ளார் . என்ற மதிப்பும் அன்பும் கலந்த உணர்வோடு மாணவர்களின் கடிதங்கள் எங்களுக்கு வந்தன .

உணர்வுபூர்வமான தொடராக வந்து நிறைவுபெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது . ஆசிரியரின் பணி அனுபவமும் உண்டு . தமிழகக் கல்வி சூழலில் விவாதிக்க வேண்டிய முக்கியமான கருத்துக்களும் உண்டு . உலகப்புகழ் பெற்ற கல்வியாளர்களின் பொன்மொழிகள் , நல்ல கல்வி என்றால் என்ன என்பது பற்றிய அறிஞர்களின் கருத்துத்தொகுப்புகள் எனப் பலவற்றின் கலவை இது . இதைப் படிக்கிற ஒருவருக்குக் கல்வி பற்றிய மாற்றுச் சிந்தனையே உருவாகும் . இந்தத் தொடரைப் படித்துவிட்டு அதன்படி எங்களது மகளுக்கு எவ்விதமாகக் கல்வியைக் கொடுக்கலாம் என்று தேர்வு செய்தோம் என்ற கடிதம் எழுதிய பெற்றோர்களும் உண்டு .

கல்வி தொடர்பான அரசின் பார்வையை மாணவர்கள் மீதான சில வகையான ஆசிரியர்களின் பார்வையை மாற்றும் வகையிலான சக்தி வாய்ந்த புத்தகம் இது . ஆசிரியர் பணியை விரும்பி மேற்கொள்பவர்களுக்கான கையேடு. தங்களின் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கல்வியைத் தரலாம் , எப்படிப்பட்ட கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்யலாம் என்று பெற்றோர்களுக்கும் வழிகாட்டி இது. மாணவப் பருவத்தில் கல்வி நிறுவனங்களில் ஏற்படுகிற பலவித உளவியல் சிக்கல்களில் மாட்டாமல் தப்பிப்பதற்கு மாணவர்களுக்கு உதவும் நூல் இது , பல்வேறு நிகழ்வுகளில் அன்பளிப்பாக அளிப்பதற்குத் தகுந்த புத்தகம் இது.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட நூலை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறோம். படியுங்கள். விவாதியுங்கள்.

அன்புடன் கே.அசோகன்.
ஆசிரியர் ‘ தி இந்து'

160 pages, Paperback

First published December 1, 2016

About the author

Era. Natarasan

38 books27 followers
கல்வி : இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டம்
ஆசிரியராக :

- தனது 16வது வயதில் பள்ளியிலிரூந்து கிராம நலப்பணி திட்ட முகமொன்றில் தான் மாணவராக இருக்கும் போதே பகுதிநேர ஆசிரியரானார்.

- 1986ல் அறிவியல் / மொழியியல் ஆசிரியராக பிரதான பணி துவக்கம்.

- 1996ல் சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வரானார்.

- 1999ல் கடலூர் கிரூஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரானார். தற்போதும் தொடரூம் பணி அது.

- 2008ல் டாக்டர்.ராதாகிரூஷ்ணன் விருது.

- கல்வி நேரடி நடைமுறையில் தனி கவனம், ஆசிரியர்களின் வழிகாடி.

- வகுப்பறை ஜனநாயகம், இவரது ஆசிரிய உத்தி.

- சோதனை முயற்சிகளை தொடரும் ஆர்வலர்.

- கல்வியாளர்கள் ஜான் ஹோல்டு, பாவ்லோ பிரையரே உட்பட பலரை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
5 reviews
September 10, 2025
மாணவர் மட்டும் அல்ல ஆசிரியரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம், என்னை மாற்றிய ஒரு பயணமே இந்த புத்தகம்
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.