armia_reads's profile picture பொஹிமியன் - அப்துல் ரகுமான்
'missed movies' என்ற youtube சேனலை அதனின் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வருகிறேன். எனக்கு உலக சினிமா பலதை அறிமுகப்படுத்தியதும், கலையின் பல்வேறு பரிமாணங்களை காண்பித்த வகையிலும், இன்று புத்தகங்களின் மேல் நான் பித்தாக திரிவதற்கும் இந்த சேனலில் பங்கு பெரும் பங்காக இருக்கிறது என்பதில் எந்த மறுப்பும் இல்லை. அந்த தளத்திலிருந்து காணொளிகளின் குரல்களாக மட்டும் நம்முடைய செவிகளுக்கு அறிமுகமான அப்துல் ரகுமானுடைய இரண்டாவது புத்தகம்.
கலையின் மீது அதிக காதல் கொண்டவனாக இருந்தால் மட்டும் தான் கலையைத் தேடித் திரிந்து அலைந்து பல கோணங்களில் கூர்ந்து கவனித்து இப்படி ஒரு புத்தகத்தை உருவாக்க முடியும் என்று இதில் இருக்கும் பல கட்டுரைகளை வாசிக்கும் போது போதெல்லாம் என்னால் உணர முடிந்தது. இந்நூலின் எழுத்தாளராகிய அப்துல் தன்னுடைய கல்லூரி காலகட்டத்தில் இருந்தே திரைப்படத்தின் மேல் ஆர்வம் இருந்து ஒரு குறும்படமும் எடுத்து தானும் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற கனவோடு திரையுலகில் நுழையும்போது ஏதோ ஒரு அந்நிய நபரின் அறிவுரையின் பெயரால் தான் இந்த உலக சினிமாக்களுக்குள் அறிமுகம் ஆகியும் இலக்கியத்திற்கு அறிமுகமாகியும் இன்று அவர் நிற்கும் இடத்தை பார்த்தால் அவருக்கே பிரமிப்பாகும் ஆச்சரியமாகவும் இருக்க கூடும். இது நான் எப்படி கூறுகிறேன் என்றால் இந்நூலில் உள்ள ஒரு கட்டுரையை வாசித்த அனுபவத்தை வைத்து தான். இதில் என்னுடைய கற்பனையும் கலக்கப்பட்டு இருக்கலாம்.
சரி இந்நூலுக்கு வருவோம். கலையில் உள்ள பல பிரிவுகளான ஓவியம், இசை, திரைப்படம், இலக்கியம் இன்னும் வரையறைக்கு உட்படாத பல கலைகளின் வேறொரு தளத்தை இந்நூலின் மூலமாக அறியக்கூடும். இதில் கூறப்பட்டுள்ள கலைஞனும் கலையும் அவ்விருவருக்கும் ஊடான பிணைப்பு எப்படி கலை உலகில் ஓர் புதிய பரிமாணத்தை உருவாக்கி காட்டுகிறது என்பது பல கட்டுரைகளின் வாயிலாக அறிந்தேன். அதேபோல் அந்த கலைஞன் உருவாக்கிய ஒரு விதமான புரட்சிகளும் பிரமிக்கும் வகையில் தான் இருந்தது. இப்படி பல வித்தியாசமான கலைஞர்கள் பற்றி மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். கலை என்பது எப்படிப்பட்ட ஒரு கருவியாக இவ்வுலகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அதை வைத்து இப்படி எல்லாம் ஒரு மனிதன் தஇதில் உள்ள புனைவு கதாபாத்திரமான ரூஜியின் வடிவமைப்பும் அருமை. இன்னும் ரூஜியை விரிவு படுத்திக் கொண்டே செல்லலாம் என்று தான் தோன்றியது. ரூஜியின் கடிதங்களும் கனவுலகமும் பல கலைஞரோடு உரையாடி வாழ்ந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்ற நிராசை தான். நூலில் எனக்கு உறுத்தலாக இருந்தது பிழையும் எழுத்து நடையும், இது இன்னும் செழுமை பெற்று இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்க கூடும் என்ற சிறிய வருத்தம் தான். மேலும் பல புத்தகங்கள் எழுத ஆசிரியரை வாழ்த்துகிறேன்.ன்னை கலைக்கு அர்ப்பணித்து கொள்பவனாக இருக்கிறானே என ஒவ்வொரு கட்டுரையும் உணர வைத்தது. குறிப்பாக transgression பற்றிய கட்டுரையும் கலையும் பித்தும் என்கிற கட்டுரையும் நிச்சயம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
இதில் உள்ள புனைவு கதாபாத்திரமான ரூஜியின் வடிவமைப்பும் அருமை. இன்னும் ரூஜியை விரிவு படுத்திக் கொண்டே செல்லலாம் என்று தான் தோன்றியது. ரூஜியின் கடிதங்களும் கனவுலகமும் பல கலைஞரோடு உரையாடி வாழ்ந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்ற நிராசை தான். நூலில் எனக்கு உறுத்தலாக இருந்தது பிழையும் எழுத்து நடையும், இது இன்னும் செழுமை பெற்று இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்க கூடும் என்ற சிறிய வருத்தம் தான். மேலும் பல புத்தகங்கள் எழுத ஆசிரியரை வாழ்த்துகிறேன்.
நண்பர் மிஸ்ட் மூவீஸ்க்கு நான் எழுதுகிற வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள். நான் பெரும்பாலும் உங்கள் புத்தக பரிந்துரையினால் ஈர்க்கப்பட்டு அதன் பேரில் பனுவல் வாசிப்பவன்…
தற்போது "பொஹிமியன்" - அப்துல் ரஹ்மான் என்ற படைப்பை வாசிச்சேன். கலையை வேறொரு பரிமாணத்திலும், அதை வேறொரு புதிய வடிவிலும் காட்டியுள்ளீர்கள் அதில் சிறப்பே உங்கள் கலைப்பார்வையும், அணி தருகிற சொற்களுடன் ஒரு கலை அகராதியைப் படைத்துள்ளீர்கள்! எப்பேர்ப்பட்ட சிந்தனை கொண்ட படைப்பு இது ? கலைக்காக தம்மையும் மாய்த்துக்கொண்டோரை பற்றியான தமிழில் எழுதப்பட்ட / சொல்லப்பட்ட முதல் படைப்பு. எடுத்துக்காட்டாக இங்கே எத்தனை பேருக்கு Vincent Van Gogh, Takeshi Kitano பற்றியெல்லாம் தமிழில் படித்து தெரிந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால் எவருமே மிஞ்சமாட்டார்கள், விரல் விட்டு எண்ணினாலும் கூட...
நான் Takeshi Kitano-வின் தீவிர ரசிகன் அவரைப்பற்றி 14 பக்கங்கள் எழுதியது எனக்கு மகிழ்ச்சியே. பொஹிமியன் நாளை உலக சினிமாவை பற்றி மட்டுமல்லாமல் அதை கலை சார் பார்வையுடன் பேசுகிற முதல் புத்தகமாக கூட விளங்கலாம் ஏனெனில், உலக சினிமா என்று பெயரிடப்பட்டு வெளிவரும் புத்தகங்கள் யாவுமே பழைய உலக திரைப்படங்களை பற்றிய தகவல்களை மட்டுமே கொண்டிருக்கும் (நான் கண்டவரையில்).
ஒரே எதிர்மறை, அதுவுமில்ல, அது என்னன்னா - எழுதுப்பிழை அதிகம் ஆனா ANDY WARHOL பத்தி 18-வது பக்கத்துல, முதல் பத்தியில உறுதியாகிடுச்சு - ஒரு புத்தகத்தை அச்சுப்பிழை கூட பாக்காம அப்படியே வெளியிட்டார்.
நான் இந்த படைப்பின் மூலம் தர்க்கத்தை மீற, ஓர் எல்லையற்ற படைப்பை உருவாக்க நினைக்கிற, எல்லையற்ற படைப்பாளனாய் என்னை உணர விழைகிறேன். நானும் வான் கா-க்கு கடிதம் எழுத்தப்போறேன், அவருக்கு மட்டுமில்ல Yasujira Ozu-க்கு கூட.
MAGICAL REALISM, SURREALISM, VOYEURISM பற்றிய தெரிவுகள் அருமை. நான் கண்ட முதல் படம் DREAMS - அகிரா குரோசவா தான். (நான் மிஷ்கின் ரசிகன்)
உங்களது படைப்பை படிச்சதுக்கு ஓர் உணர்தலின் விளைவா நான் இந்த கட்டுரையை தொகுக்காம அப்படியே எழுதுறேன். கலையும் பித்தும் என்ற கட்டுரை எனக்கு வேறு பரிமாண அனுபவத்தை கொடுத்தது.