எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறியோர்க்குக் கனிநூல். பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். மனம் இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் எழுதியவற்றின் தொகைநூல்.
ஒரு மொழிக்கு அதன் இலக்கணம் எவ்வளவு இன்றியமையாதது என்றும் ஒரு மொழியின் மக்களாகிய நாம் நம் மொழியை வாய் வழியே மற்றும் கற்றிராது இலக்கணத் தேர்ச்சி கொள்வது எவ்வளவு அவசியம் என்பதையும் நமக்கு விளக்கி பதின்மூன்று நூல்கள் கொண்ட தமிழ் அறிவோம் எனும் இத்தொகுப்பின் மூலம் தமிழை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர் மகுடேசுவரன் அவர்கள்.