Jump to ratings and reviews
Rate this book

நேற்றின் நினைவுகள்

Rate this book
திரும்பிப் பார்க்கையில்காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு வரியை நகுலன் எழுதியிருக்கிறார். வாசிப்பின் வழியே இது போன்ற அனுபவதிதைப் பலரும் அடைத்திருப்பார்கள்.
நகுலன், கிரா, தோப்பில் முகமது மீரான், ஆ.மாதவன், தி. ஜானகிராமன், வண்ணநிலவன், விட்டல்ராவ், எஸ்.எல்.எம். ஹனீபா, ஷங்கர் ராமசுப்ரமணியன் எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.

184 pages, Paperback

Published January 1, 2022

1 person is currently reading
8 people want to read

About the author

S. Ramakrishnan

163 books664 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (40%)
4 stars
2 (40%)
3 stars
1 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Boje Bhojan.
31 reviews
January 6, 2022
நேற்றின் நினைவுகள் - எஸ் .ராமகிருஷ்ணன் - கட்டுரை தொகுப்பு - பதிப்பகம் , தேசாந்திரி - முதல் பதிப்பு , டிசம்பர் 2021- பக்கங்கள் ,182

நேற்றின் நினைவுகள் - நினைவுகள் வழியே தனது அனுபவத்தை பகிரும் ஒரு எழுத்தாளரின் கட்டுரை தொகுப்பு

புத்தகம் பற்றி :

மொத்தம் 182 பக்கங்களும் 32 கட்டுரை தலைப்புகளும் கொண்ட இந்த புத்தகத்தில் எழுத்தாளர் அவர்கள் படித்த ,பழகிய நூல்கள் மற்றும் எழுத்தாளர்களை பற்றி தனது அனுபவம் மூலம் சொல்லும் ஒரு நூல் . முதல் தலைப்பான நேற்றின் நினைவுகள் என்று ஆரம்பித்து கடைசி தலைப்பு மகா பிரஜாதிபதி வரை ஏக பட்ட தகவல் இந்த புத்தகத்தில் இருக்கிறது அவற்றில் சிலவற்றை பார்ப்போம் .

நேற்றின் நினைவுகள் - தி. ஜானகி ராமன் அவர்களின் ஜப்பான் வழி பயணத்தை உதயசூரியன் என்ற பெயரில் புத்தகமாக எழுதி இருக்கிறார் அதை பற்றி பேசுவதே இந்த தலைப்பு இந்த தலைப்பில் ஜப்பான் வாழ்க்கை முறை ,கலை, பண்பாடு உணவு முறை போன்ற வற்றை பதிவு செய்து இருக்கிறார் எழுத்தாளர் என்று சொல்லி இருக்கிறார்.

மழையின் மனிதர்கள் - புத்தகத்தின் ரெண்டாவது தலைப்பான இது வண்ணநிலவனின் ரெயினீஸ் அய்யர் என்ற நாவல் பற்றியது . இந்த நாவல் எதை பற்றியது எதற்காக இதை மழையுடன் தொடர்பு படுத்தி இருக்கிறார் என்பதை இந்த கட்டுரை படிக்கும் பொது தெரியும்.

கி.ரா நூற்றாண்டின் சாட்சியம் - புத்தகத்தின் 12 தலைப்பான இது கரிசல் பிதாமகன் கி.ரா அவர்களை பற்றியும் அவரின் நாவல் மற்றும் இதர படைப்புகள் பற்றியும் பேசும் ஒரு தலைப்பாகும் குறிப்பாக அவரது படைப்புகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள் எவ்ளோ வலிமை நிரம்பியது என்பதை ஆசிரியர் சொல்கிறார்

மறக்க முடியாத கதாபாத்திரம் - இந்த மறக்க முடியாத கதாபாத்திரம் என்ற 22 தலைப்பு எதை பற்றி பேசுகிறது என்றால் தஸ்தாயொவெஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் புத்தகத்தில் வரும் ரஸ்கோல்னிகோவ் பற்றியது ஏன் இந்த கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்பதை இந்த கட்டுரை படிக்கும் பொது அறியலாம்

புத்தரின் அரிச்சுவடியில் புத்தகத்தின் 31வது தலைப்பான இது புத்தரின் வாழ்க்கையை பயண அனுபவம் மூலம் காண்பிக்கும் ஒன்று அதாவது அவரின் பிறந்த இடம் , அவர் ஞானம் பெற்ற பகுதி அதோடு மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள புத்த மடாலயங்களை பற்றியும் பேசுகிறது.

இதை தவிர இலங்கை எழுத்தாளர் ஹனிபா , மலையாள படைப்பாளி எம் .ஏன் பாலூர் , சுந்தரவடிவேலுவின் மாஸ்கோ பயண அனுபவம் , ஜி.டீ நாயுடுவின் பயண அனுபவம் , ஷங்கர் ராமசுப்ரமணிய கவிதை தொகுப்பு , விட்டல் ராவ் அவர்களின் கலைகள் பற்றிய கட்டுரைகள், கா .ந .சு அவர்கள் மொழி பெயர்த்த நாவல் மற்றும் கதைகள் , வேலூர் லிங்கம் அவர்களின் இலக்கிய ஆர்வம் , உலகின் முதல் புத்தகம், நகுலனின் படைப்பு மற்றும் வாழ்க்கை, மகா பிரஜாதிபதி என ஏக பட்ட கட்டுரைகள் இருக்கின்றன.

படிக்க படிக்க மேலும் ஆர்வத்தையும் அனுபவத்தையும் தருகிறது இந்த புத்தகம்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.