“என்னா பெருமாளு? இந்த தரம் உன்னோட பெட்டிங்க தான் அதிகமா இருக்கு?” ஏஜெண்ட் சிரித்தான். வெற்றிலைக் கறை படித்த பல்லைப் பார்த்தால் பயமாக வந்தது. பெருமாள் மெதுவாகச் சிரித்தான். “அப்படியெல்லாம் இல்லை ஏஜெண்டு. இந்த தரம் மழை கை விட்டாலும் நம்மகெணறு கை கொடுத்திட்டது. ஆரம்பத்தில் இருந்து நல்லா கவனிச்சு பாடு பட்டோம் அதுதான்.” “அது ஒண்ணுமில்லை ஏஜெண்டு. பெருமாளுகூட அவன் பெண்டாட்டியும் சரிக்கு சரியா வேலை செய்யும். நம்ம வீட்டுல இருக்கறதுங்களுக்கு டி.வி. பொட்டியிலே தான் உலகமே இருக்கு? சோறு கூட நாம தான் போட்டுத் திங்கணும். அப்புறம் எப்படி மகசூல் காட்டறது?” என்று அலுத்துக் கொண்டவனைப் பார்த்து ஏஜெண்ட் கேட்டான். “நீ இப்படி புலம்பறதை நிறுத்து.