தன் இளம்பருவம் தொடங்கி, 25 வருட காலம் RSS இயக்கத்தில் தீவிர ஊழியனாகச் செயல்பட்ட சுதீஷ் மின்னி தான் கற்றதும், பெற்றதும் என தனது RSS நாட்களின் முழு அனுபவத்தையும் இப்புத்தகத்தின் ஊடே பகிர்ந்துள்ளார்.
இவ்வமைப்பு எவ்வாறு தொடங்கி, எந்தெந்த பாதைகள் மூலமாக சமூகத்தில் ஜாதி, மத, குல வேறுபாட்டை உட்புகுத்துகிறது என்பதையும் மக்கள் மனதில் மனிதநேயத்தை குலைக்க எந்தெந்த பாதைகள் மூலமாக தன் பரப்புரையை மேற்க்கொள்கிறது என்பதையும் தன் கடந்த கால சங்பரிவார் நாட்களில் தனக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்வதின் மூலம் அவ்வமைப்பின் பேராபத்தை விளக்குகிறார்.
இந்து ராஷ்ட்ரம் ஏற்படுத்துவதே அக்கழகத்தின் கொள்கை என்றும், கோல்வாக்கர், ஹெட்கேவர் தொடங்கி இன்று வரை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இவர்கள் ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற வகுப்புவாத பிரிவினைகளையும், நேரடியாக அல்லாமல் நாட்டின் மதநல்லினக்கத்தை குலைக்க வெவ்வேறு பெயர்களில் உலாவி வரும் இவர்களின் அடையாளங்களை நாம் காண வழி காட்டுகிறார்.
RSS-ன் உண்மை முகத்தை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
இப்புத்தகத்திற்க்கு தமிழ் வடிவம் தந்த கே.சதாசிவன் அவர்களின் முயற்சிக்கு பெரும் நன்றிகள்.
RSS அமைப்பின் மெய்யான நோக்கத்தையும் அதை அடைய கையாளப்படும் பொய்மைகளும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னும் RSS இன் மதவெறுப்பை தூண்டும் செயல்கள் பற்றிய செய்திகளை கேள்வியுற்றுள்ளேன் ஆனால அவை வதந்திகளாய் இருக்கக்கூடும் என்று எண்ணியிருந்தேன் ஆனால் அவ்வமைப்பிலேயே இருபத்தைந்து ஆண்டுகள் இருந்த ஒருவர் தன் அனுபவங்களை விளக்குகையில் மனம் பதறுகிறது.