வானகமோ நிலவோடுவையகமோ நீரோடுநீ மட்டும் நிழலோடுநிழலாக ஏன் மறைந்தாய்?அதிகாலை நேரக் குளிர் காற்று பனிவாடையுடன் உடலைத் தீண்டிச் சென்றது. காடுகளடர்ந்த மலைப் பாதையின் ஓரத்தில் பூத்திருந்த பூக்களின் சிகப்பு நிறம் கண்ணுக்குக் குளுமையையும் மனதிற்கு உற்சாகத்தையும் அளித்தது. அந்த அதிகாலையில் அவர்களைப் போலவே ஜாகிங் வந்தவர்களில் அறிமுகமானவர்கள் கைகளை ஆட்டி விட்டுச் சென்றனர். பதிலுக்கு உற்சாகமாய் கையாட்டிக் கொண்டே ஓடிக் கொண்டு இருந்தார்கள் பாண்டியனும், காமேஷும்."காமேஷ்.""என்ன பாண்டியா?""நேத்து பாவனா கிட்டயிருந்து லெட்டர் வந்ததோ...?""ஏய்ய்... என் பொண்டாட்டி எனக்கு லெட்டர் போட்டது உனக்கெப்படித் தெரியும்? நான் சொல்லவேயில்ல