'சேற்றில் மலர்ந்த செந்தாமரை' என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள் யாவும் சிந்தனையைத் தூண்டி மனித வாழ்வை வளப்படுத்தும் வேட்கையைப் பிரதிபலிக்கும் கதைகளாகும். கதை எழுதுவதென்பது ஆசிரியருக்குக் கைவந்த சரக்கு. ரகுநாதன் படைத்து விடும் பாத்திரங்கள் நம் உள்ளத்தை விட்டு நீங்குவதில்லை.
தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.