நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில், ‘மணிக்கொடி’ முதல் ‘எழுச்சி’வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின் முப்பத்து மூன்று சிறுகதைகள், இப்போதுதான் முதல்முறையாக இத்தொகுப்பில் பிரசுரம்பெறுகின்றன. எண்ண வெள்ளமாய்ப் பொங்கும் இயல்புணர்வுகளின் பெருங்காடே, இம்முழுத் தொகுப்பு. லௌகீகத்தின் இரைச்சலும் தத்துவத்தின் அமைதியும் பளிச்சிடும் உணர்வோடைக் கதைஞராகவும், ‘பரிசோதனை எழுத்தாளராகவும்’ எம்.வி.வி. அடைந்த கலை வெற்றியின் படைப்பாவணமாகிறது இந்நூல்.
Venkatram was born in Kumbakonam in a Sourashtra family. He obtained a B.A degree in Economics and was involved in silk Zari business. He first started publishing in the literary magazine Manikodi in the 1930s, while he was still a college student. He was influenced by Ku. Pa. Rajagopalan and was part of a literary circle that included Karichan Kunju (R. Narayanaswami), Thi. Janakiraman, Thiruloka Seetaram, Dhenuka, Thanjai Prakash, Na.Vichuvanathan, C.M.Muthu and Podhikaiverkpan. His works have been published in magazines like Kaalamohini, Grama Ooozhiyan and Sivaji. He also ran a literary magazine named Thenee briefly. He has written over two hundred short stories and novels. Nithyakanni Kathukal and Velivithee are his most noted works. He also wrote more than 60 short biographies for Palaniappa Brothers and translated over 10 books for the National Book Trust of India. In 1993, he was awarded the Sahitya Akademi Award for Tamil for novel Kathukal (lit. Ears).
இக்கதைத் திரு எம்.வி. வெங்கட்ராம் அவர்களால் இயற்றப்பட்டது. புதுமையாக இருந்தது படிப்பதற்கு. ஏனென்றால் இப்படியும் ஓர் தாய் இருக்க முடியுமா என்று படிப்பவரின் மனதில் ஓர் எண்ணம் உண்டாகும். ஏன் அவனது தாய் அப்படி மாறினாள் என்பதைத் தெளிவாகத் தன் எழுத்துக்கள் மூலம் நம் அனைவரின் மனதில் பதியும்படி கொடுத்திருப்பார்த் திரு எம்.வி.வெங்கட்ராம் அவர்கள். இக்கதையைப் படிக்கும் போது ஒருத் தகப்பனானவன் எப்படி நடக்கக் கூடாது என்பதையும் மற்றும் தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் தன் எழுத்தின் மூலமாக ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருப்பார்.
ராஜம் கதையின் நாயகன் அவனுக்குத் தற்போது இருபத்தி ஐந்து வயது ஆகிறது. அவனுடன் மொத்தம் பிறந்தவர்கள் ஒன்பது பேர். அதில் நான்கு நபர்கள் ஆண் பிள்ளைகள் மற்றும் ஐந்து பேர்ப் பெண் பிள்ளைகள். இவரது தந்தைக்கு நெசவுத் தொழில். தினம் அவனது தந்தை கள்ளுக்கடைக்குப் பேய்க் கள்ளுக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தன் மனைவியை மாடு அடிப்பது போல் அடித்துத் துன்புறுத்துவார். அவனது தாய்ப் பொருத்துப் பொருத்துப் பார்த்துப் பொறுமையின் எல்லையைக் கடந்தபின் தன் கணவனைத் திருப்பி அடிக்க, கடிக்க ஆரம்பித்தாள். அதற்குப் பிறகு சிறிது நேரம் கழிந்தவுடன் ராஜத்தின் தகப்பன் அவரது மனைவியைக் கொஞ்சுவதின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாகப் பிள்ளைகள் வரிசையாகப் பிறந்தனர். அனைவருக்கும் மூத்தவன் ராஜம்தான். தினம்தோறும் அவர்களது வீட்டில் சண்டையும் சச்சரவுமாகத்தான் இருக்கும். இதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த ராஜம் தன் தாய் மீது இருந்த பாசத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டான். அவனின் தாயும் அதற்கு ஆமோதிக்கிற மாதிரி எப்போதும் அவனைத் திட்டித் தீர்ப்பாள். அவன் காலை எழுந்தவுடன் தன் தாய் மூஞ்சியைப் பார்த்துவிடக் கூடாது என்று எண்ணிக் கண்களை மூடிக்கொண்டு சுவரில் இருக்கும் கண்ணாடியைப் பார்ப்பது வழக்கமாக வைத்திருந்தான்.
ஒரு நாள் அப்படிதான் விடியற்காலைப் பக்கத்து வீட்டுச் சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்தான் படுக்கையை விட்டு. மணியைப் பார்த்தான் விடியற்காலை நாலே கால் ஆகியிருந்தது. எங்கே சத்தம் போட்டால் தன் தாயானவள் எழுந்துச் சண்டை இழுப்பாளோ என்று நினைத்து மெதுவாக வீட்டின் முகப்புப் பக்கம் வந்தான். காலையில் ஒரு காபிக் குடித்து விட்டு வேலைக்குச் செல்லலாம் என்று எண்ணினான். அப்போது அவனது தாய் எழுந்து அவனிடம் பஞ்சாமிக் கடையில் ஒரு தோசையும், டம்ளரில் சாம்பாரும் வாங்கிவரும்படி கூறினாள். இவன் முடியாது பஞ்சாமிக் கடையில் டம்ளரில் சாம்பாரெல்லாம் தரமாட்டார்கள் என்றான். இருவருக்கு இடையே வாக்குவாதம் அதிகமாக அது சண்டையில் முடிந்தது. அவனது அம்மா அவனிடம் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பேச முடியும் அவளுக்கு வேண்டும் என்று எனக்குத் தெரியாமல் சேலை, தாலி, ரூபாய் எல்லாம் சேர்க்க முடிந்த உனக்குஅம்மாவுக்கு தோசை மற்றும் சாம்பார் வாங்க மனம் மறுக்கிறது என்றாள். பிறகு இவளிடம் வாயைக்கொடுத்து வெற்றிகாண முடியாது என்று எண்ணி வீட்டினுள் அவனே போய் டம்ளரை எடுத்து வாசல் பக்கம்வந்தான்.
இவனது கடைசித் தங்கை பிறந்த சில காலங்களில் ராஜத்துடன் அப்பா தவறிவிட்டார். கள்ளுக் குடித்துவிட்டு வழக்கம் போல் தன் மனைவியிடம் சண்டை இருத்து மறுபடியும் அளவுக்கு அதிகமாகச் சாராயம் குடித்ததால் சுயநினைவை இழந்து மயங்கிக் கீழே விழுந்து உயிரைவிட்டார். அவர் மறைவுக்குப் பிறகு தறியை ஓட்டுவது ராஜம்தான். எப்படியோ மூன்று தங்கைகளுக்குத் திருமணத்தை நடத்திவைத்தான் ராஜம். மிஞ்சியிருப்பது இரண்டுத் தங்கைதான்.
வாசல் பக்கம் போன அவனிடம் சாரங்கன் என்ன ராஜம் காலையில் வெளியே கிளம்பிவிட்டாயா என்றான். எங்கே அவனது தாய்ப் போட்டச் சத்தத்தால்தான் சாரங்கன் எழுந்து இங்கு அமர்ந்திருக்கிறானோ என்று நினைத்தான். அவன் கேட்டக் கேள்விக்குப் பதிலாகக் கடைக்குப் போய் ஒரு காபிக் குடித்துவிட்டு வந்து தறிவேலையில் அமரலாம் என்று எண்ணி வெளியே கிளம்புகிறேன் என்றான். சாரங்கன் உடனே அவனிடம் கடைவீதியில் அவனுக்கு இரண்டு இட்டலி மற்றும் டம்ளரில் சாம்பார் வாங்கிவரச் சொன்னான்.
ராஜம் கடைவீதிக்குப் போய்க் காபிக் குடித்துவிட்டுச் சாரங்கனுக்கும் அவனது தாயுக்கும் வேண்டியதை வாங்கிக்கொண்டு வந்து வீடு சேர்ந்தான். ஆனால் அவனது அம்மாவோ அவன் வாங்கி வந்த தோசையை மற்றும் சாம்பாரைச் சாப்பிடாமல் மீண்டும் அவனுடன் சண்டையை ஆரம்பித்தாள். கொண்டுபோய் உன் பங்கஜத்திடமே கொடு நான் சாப்பிட மாட்டேன். தாயிக்குச் சாப்பாடு வாங்கிவரச் சொன்னால் என்னிடமே ரூபாய்க் கேட்கத் தோன்றுகிறது உனக்கு. அதுவே உனக்கு மனைவியா வற்றப்போகிறவளுக்குப் பெட்டியில் காசு, தங்கத்தாலி, புடவை அனைத்தையும் பூட்டிவைக்கத் தெரியும் என்றாள். இவனுக்குப் பெருத்த கோபம் வந்தது, தன்னிடம் கேட்காமலே தன் பெட்டியை எப்படித் திறந்துப் பார்க்கலாம் என்றான். அதற்கு இந்த வீட்டில் இருக்கும் பெட்டியைப் பார்ப்பதற்கு யாரிடம் கேட்கவேண்டும் என்றாள் அவனது தாய்.
பிறகு அவனது தங்கையை அழைத்துக்கொண்டு தறி நெய்வதற்குச் சென்றான். அவனது தங்கை அவனுடன் சேர்ந்து வேலைச் செய்து கொண்டிருக்கையில் . அவனது தாய் அவளது மகளைக் கூப்பிட்டாள். இரண்டு முறை கூப்பிட்டப் பிறகு தங்கை பயந்துகொண்டு தாய் இருக்கும் இடத்திற்குச் சென்றாள். இவன் ஏன் இவளை இப்படி வேலை நேரத்தில் கூப்பிடுகிறாய் என்றான். பக்கத்துத் தெருவில் இதே வேலைக்கு முன் பணமாக நூறு ரூபாய் தருகிறார்களாம். அதனால் இனிமேல் உன் தங்கை அங்குதான் வேலைக்குப் போகப் போகிறாள் என்றாள். இவன் நான்தன் இவளை என்னுடன் ஒத்தாசைக்காக வைத்திருக்கிறேனே பிறகு ஏன் இவள் மற்ற இடங்களில் போய் வேலைச் செய்ய வேண்டும்.
நீ எப்படி உன் திருமணத்திற்குப் பணம் சேர்த்து வைத்துள்ளாயோ அதேபோல் உன் தங்கை சம்பாதித்து என்னிடம் கொடுப்பாள். நான் அவளுக்கு வேண்டியதைச் சேர்க்கப் போகிறான் என்றார். ராஜத்துக்கு இவளது உள் நோக்கம் புரிந்தது. தன்னிடம் இருக்கும் பணம், தங்கம், அனைத்தையும் பெறுவதற்கு இப்படி ஒரு செயலைச் செய்கிறாள் என்று நினைத்து. தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தன் தங்கையிடமே கொடுத்துவிட்டான். பெட்டியின் சாவியை அவன் அவளிடம் கொடுத்து எல்லாம் உனக்கே என்று கூறி விரக்தியுடன் வெளியே போனான்.
வெளியே போனவன் வீடு திரும்பினானா? அவன் எண்ணிய மாதிரி பங்கஜத்தை கைப்பிடித்தானா? என்ன நடந்தது ராஜத்துக்கு? முழுவதையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.