அன்னையின் பெருமை அகிலம் அறிந்தது தான். ஆனால் தந்தையின் பெருமையை பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை இந்த உலகம். ஏனென்றால் அது வெளியே தெரியாது. அதுவும் இல்லாமல் அவருக்கு இதைப் பற்றி எந்தவித பாதிப்பும் இல்லை. அவருக்கு கடமையை செய்வதிலே காலம் போய்விடும். அத்தகைய தந்தையின் மற்றொரு பரிணாமமே இந்த கதை... எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நிலைகுலையாமல் தன் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு மூத்த மகனாய் பிறந்தவன் தந்தையாய் மாறிய பின்பும் தன் நிவையில் இருந்து மாறாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறான். அவன் வாழ்வில் அவன் அடைந்த இன்ப துன்பங்களே இந்த கதை. அவன் நெருப்புக்குள் நின்றதால் தான் அவன் குடும்பம் நிலா போல் பிரகாசிக்கின்றது. அவனின் கதையை எழுதுவதில் நான் பெரும் மகிழ்ச்சி