சினிமாவில் முயற்சி செய்பவர்கள் ஒரு படம் எடுக்க பல கோடிகள் செலவு ஆகும் என்று நினைத்துக்கொண்டு தன்னிலை மறந்து தேங்கி நிற்கிறார்கள். இந்த போலி நம்பிக்கைகளை சிதைக்கும்படியாக இந்த புத்தகமும் இதில் சொல்லப்படும் கதைகளும் இருக்கும். சினிமாவை மாற்றிய பல விஷயங்களை பற்றி இதில் பேச முயற்சி செய்துள்ளோம். ஒரு கலைஞனின் சுதந்திரமான படைப்பை தான் சுயாதீன திரைப்படம் என்று சொல்வார்கள் . ஒரு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் ஒரு கலைஞனுக்கு சுதந்திரம் என்பது வெறும் பொய்யாகவே இருக்கின்றது.
ஒரு independent cinema வின் பெயர் குறிப்பிடும் புத்தகமாக இல்லாமல் அது எடுக்கப்பட்ட முறை குறித்தும் ஆய்வு செய்திருக்கிறார். படிக்கும் அன்றே அதில் குறிப்பிட்டிருக்கும் படங்களை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது.
சினிமா ஒரு பார்வை, உலக சினிமா பற்றியும் , சினிமா கலை தோன்றிய காலத்தில் சினிமாவை எந்த பார்வையில் பார்க்க வேண்டும், அவர்கள் எடுத்த சுயதீன திரை படங்கள் பற்றியும், பண தடை உள்ளவர்கள் எவ்வாறு திரைப்படம் எடுப்பது பற்றி நல்ல முறையிலேயே கூறியுள்ளனர். ஹாலிவுட் சினிமாக்களின் தாக்கம் இன்னும் பலர் மனதில் உள்ள ஒன்றே. அதன் தீமைகளையும் கூறியுள்ளது இந்த திரை நூல். அதிருப்தி என்னவென்றால் ஹாலிவுட் தீமைகளையும்,உலக சினிமாக்களை பற்றி கூறிவிட்டு சில இடங்களில் கமர்சியல் சினிமாக்களை தூக்கி பிடிப்பதைக் காண முடிகிறது. சினிமா துறையில் சாதிக்க நினைப்பவர்கள் கட்டாயம் படிக்கலாம். நான் கண்டிப்பாக ரெக்கமண்ட் செய்வேன்.
கலையின் மிது கொண்ட தீராக்காதல் உருவான ஒரு உன்னதமான படைப்பு இது. எந்தவொரு சமரசமும் இல்லாத உண்மையான கலையை மக்களிடம் சேர்ப்பதற்கு உரிய ஒரு வழிகாட்டியாக இந்த புத்தகம் எனக்கு தோன்றுகிறது. இப்புத்தகத்தில் சில பகுதிகளை நான் திரும்பத் திரும்பப் படித்தேன் மிகப்பெரிய உந்துதல் தந்தது முக்கியமாக (பாலுமகேந்திரா, இண்டிபெண்டண்ட் சினிமா) போன்ற பகுதிகளை நான் திரும்பத் திரும்பப் படித்தேன்.