அதிலை என்னும் பெரும் இராஜ்ஜியம் அதனை ஆளும் மன்னர் பிரகாசபாசு, அவரை கொல்லத் துடிக்கும் சனியன் கிழவி, அங்கு அடிமையினை போல வாழும் சிறு பாலகன் விக்ரமன், கோட்டையின் காவல் தலைவன் வங்கன், நகரை கொள்ளையடிக்க காத்திருக்கும் அசுரர்கள், இவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் சூழ்ச்சி முடிச்சியின் மையமே இந்த அசுரக் கூட்டம். தர்மத்தை பொறுத்து நடத்தப்படும் சூழ்ச்சிகளும் தர்மமே என்றாலும் இங்கு தர்மமென்பது அவரவர் பார்வையினை பொறுத்து மாறுபடுகிறது, இக்கதை எவரையும் நல்லவராகவும், எவரையும் தீயவராகவும் நிறுவாமல் அவர்களின் சூழ்நிலை அவர்களை எப்படி மாற்றுகிறது என்று நிறுவுகிறது. அசுரக் கூட்டம் நிச்சயம் உங்களின் சுவாரசியத்தினை அதிகரிக்கும் வகையில் அடுத்தது என்ன நிகழும் என்ற ஆர்வத்துடனும், பற்பல திருப்பு முனைகளுடனும் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் வளரி என்னும் நம் தமிழின பாரம்பரிய ஆயுதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
Exceptionally good one to read... Didn't feel like it's too long...and was very thrilling to know next what may happen ? Well the author has a bright future... And happy to have a author who is a Tamizhan❤️💐