அன்பால் மலரும் அனைத்து காதல்களும் முடியுமிடம் திருமணம் தான். ஆனால், அந்த திருமணம் என்ற பந்தமே, நாயகியின் கலாச்சார சூழலுக்குள்ளும், சுய விருப்பு வெறுப்புகளுக்குள்ளும், கடந்த கால காயங்களுக்குள்ளும் மாட்டி கொண்டு தத்தளிக்க, அதை நாயகன் நீக்கி, அவளை கைபிடிப்பானா என்பதே இந்த எந்தன் அர்த்தங்கள் நீயே. நகைச்சுவை காதலுடன் கைகோர்த்து மெல்லிசை வாசித்திட, உங்கள் நெஞ்சங்களை இந்த கதை பரவசமாக்கிடும் என்பதில் ஐயமில்லை. அன்புடன்...மிரானா ரோஸ்.