ஒரு படம் உங்களுக்கு பிடித்திருப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். அது ரசனை சார்ந்தது. ரசனை தனியுரிமை சார்ந்தது. அதனால் அதை குறித்து எந்த விமர்சனமும் இங்கு பேசப்போவதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கும் படத்தில் நிறைய குறைகள் உண்டு. படத்தில் நிறைகள் குறைகள் அவரவர் பார்வைக்கேற்ப கூடக்குறைய இருக்கும். படத்தில் குறியீடு, மகாபாரத உள்ளர்த்தம் என்றெல்லாம் போகாமல், படத்தினால் பொதுவெளியில் உண்டாகியிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில் மட்டுமே இந்த எழுத்தை அணுகியிருக்கிறேன். இந்த படம் வந்ததிலிருந்து என்னை சுற்றி சுற்றி வந்த பல கருத்துக்களால், அது உண்டாக்கிய மனஉளைச்சலால் எழுதினால் நிம்மதி என்பது போலிருந்தது.