வைகை ஆற்றில் குளித்துக் கரையேறும்போது, ஆளை அடித்துச் சுருட்டும் குளிரைப் போக்கிக் கொள்ளவும், உடல்சூட்டை கூட்டவும் பெண்கள் நறவு அருந்தியிருக்கிறார்கள். நறவம் குடிக்கும் முன், வெண்மையாக இருந்த அவர்கள் கண்கள் குடித்தபிறகு லவங்கப் பூப்போலச் சிவந்ததாக (வெள்ளை நிறமுடைய லவங்கம் கருஞ்சிவப்பாக மாறிவிடும்) எழுதுகிறார் புலவர். கள்ளும் பதநீரும் தமிழ்நிலத்தின் நெடுங்கால உணவு. கள் குடிப்பதில் பால் வேறுபாடு இல்லை, வயது வித்தியாசம் இல்லை. மட மங்கையர் மது மகிழ்ந்தனர் என்கிறது பட்டினப்பாலை. அவ்வை அதியமானுடன் குடித்துப் பாடிய பாடலில் “தான் மகிழ்ந்துண்ணும் மன்னே” என்கிறாள். ‘தேறல்’ எனும் கள்ளைச் சுவைத்த அவள், ‘தேள் கொட்டியது போல்’ உள்ளதென்று தானருந்திய க
Karthick is a well-known Tamil writer by his pen name Karthik Pugazhendhi, who has authored more than ten books, including three volumes of short stories. His works have been featured in other university curricula. Apart from this, he has written columns in many Tamil magazines. Works in the field of journalism. Trained as a Sub-Editor in Writer Ki.Rajanarayanan's KathaiSolli Magazine.