Jump to ratings and reviews
Rate this book

எல்லோர்க்கும் அன்புடன்: Ellorkkum Anpudan

Rate this book
நான் கீரிப்பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா, சோளக்கதிரா, சோற்றுக்கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா? தெரியாது. நான் பூவெனில், எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது. நான் தாவரமாகவும், மிருகமாகவும், மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும், உயிர்ப்பிலும் மட்டுமல்ல, எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்.

291 pages, Kindle Edition

Published December 21, 2020

Loading...
Loading...

About the author

Vannadasan

23 books86 followers
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (75%)
4 stars
2 (25%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books181 followers
January 17, 2026

கடிதம் எழுதுதல் கிட்டத்தட்ட காலப்போக்கில் மறைந்து போன ஒரு கலையாகவே மாறிவிட்டது. Letter to my past self, Letter to my future self-இல் உழன்று வரும் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு கடிதத்திற்கான காத்திருப்பு புரிந்திருக்க வாய்ப்பில்லை. என் அப்பா அம்மாவின் மூலம் தான் கடிதங்கள் மீது எனக்கு ஆர்வம் உண்டானது. “Letters to Milena” என்ற Kafka-வின் கடிதங்களை புத்தகமாக படித்த பின்பு,அதே பொல் நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும் என நினைத்து, என் தேடலில் தமிழில் நான் கண்ட பொக்கிஷம் தான் இந்த புத்தகம்.

வண்ணதாசன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு தான் இந்த படைப்பு. பதில் கடிதங்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. இவர் எழுதிய கடிதத்தின் மூலமாகவே, முந்தைய நபர் எழுதியிருக்கும் சம்பவங்களை நாம் ஊகிக்க முடியும். எனக்கு “வண்ணதாசன்” என்ற எழுத்தாளனை எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவு “கல்யாணி” என்ற அந்த மனிதரையும் மிகவும் பிடிக்கும். ஒரு வண்ணதாசன் புத்தகம் வாசித்தாலே எனக்குள், என் எழுத்திற்குள் அவரது தாக்கம் நிறைய இருக்கும். இந்த புத்தகம் எனக்கு வண்ணதாசன் என்ற மனிதரை இன்னும் பரிச்சயமாக்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நலம் விசாரித்தல், பணிச்சுமை பற்றிய கடிதங்கள், இறந்தவர் வீட்டிற்கு எழுதும் கடிதம், writers block பற்றி சக எழுத்தாளர்களுடன் பகிர்வது, குடும்பம், பணி மாற்றம், பயணம் என இயல்பான எல்லாமே இந்த கடிதங்களில் இருக்கும். வாழ்க்கைய இவர் போல் ரசித்து வாழ வேண்டும். எல்லா கடிதங்களும் அன்பு நிறைந்தவை. எனக்கு இந்த புத்தகத்தை விமர்சனம் என்ற பெயரில் எழுத ஒன்றுமே இல்லை. நான் ரசிக்கும் ஒரு மனிதரின் வாழ்வை, எண்ண ஓட்டங்களை இந்த புத்தகம் மூலம் இன்னும் அறிந்துக் கொண்டேன் என்று சொல்வது தான் சரி.

இந்த புத்தகத்தை நான் மூடும்போது ஒரு சிறிய நொடி மனம் வெறுமையாகிப் போயிற்று. யாரோ நெருக்கமான ஒருவர் தூரம் சென்றதுபோல். வண்ணதாசன் எழுதும் இந்தச் சிறியச் சம்பாஷணைகள், நமக்கு தெரியாமல் நம் வாழ்வின் அமைதியான மூலைகளில் ஒவ்வொன்றாக இடம் பிடிக்கின்றன. ஒரு கடிதத்தின் மென்மையும், ஒரு மனிதரின் உள்ளங்கையின் வெப்பமும் இத்தனை நெருக்கமாகக் கிடைக்கலாம் என்பதை இந்தப் புத்தகம் மீண்டும் நினைவூட்டியது. சில புத்தகங்கள் வாசித்த பின் நம்மை மாற்றி விடும்,இந்த புத்தகம் என்னை இன்னும் கொஞ்சம் மென்மையான மனிதராக மாற்றியது.

எல்லார்க்கும் அன்புடன் என்று முடியும் இந்தக் கடிதங்கள் போலவே, இந்தப் புத்தகமும் வாசிக்கும் மனதிற்கு அன்புடன் விடைபெறுகிறது. கடிதங்கள் மறைந்து போன காலத்தில், மனிதர்கள் இன்னும் இப்படியாக இருந்தார்கள் என்பதை நினைவூட்டும் ஒரு நிசப்தமான நன்றியுணர்வே இந்தப் புத்தகம்.
Profile Image for Rajesh Arumugam.
145 reviews3 followers
June 28, 2024
Fantastic letters with so much anecdotes .. many lines felt like life advices to me. Wish we had the habits of writing letters these days
Profile Image for Preethi Rajan.
45 reviews5 followers
March 22, 2026
இந்த புத்தகம் மிக எதார்த்தமாய் இருந்தது. இது ஒரு மிருதுவான வாசிப்பு.

கடிதங்கள் எழுதுவதும், அதற்கு அவர்கள் என்ன பதில் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்து, கற்பனை செய்து கொண்டு இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது போலும். கடிதம் எழுதி அனுப்புவதற்கு எவ்வளவு நண்பர்கள் - அதுவும் ஒரே போல் ரசனை உள்ள நண்பர்கள் அமைந்தால் வாழ்க்கை எவ்வளவு அழகாய் இருக்கும்! இந்த விஷயத்தில் வண்ணதாசன் மீது எனக்கு சிறு பொறாமை தான்.
Displaying 1 - 3 of 3 reviews