ஒரு சாதாரண வாசகன், தமிழ் தேசம் ,தன்னுரிமை, மொழியுரிமை, சாதி ஒழிப்பு ,தீண்டாமை ஒழிப்பு முதலானவை பற்றி தொடக்கநிலை ஆக வேணும் சில புரிதல்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதில் கவனத்தை செலுத்தி அதுபற்றி சிந்திக்க,அது சார்ந்த செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் ஓர் அரிச்சுவடி போல எளிய நடையில்,எளிய வடிவில் எழுதப்பட்ட நூல் இது. அப்போது " இந்த திக்கில் இது ஒரு தொடக்கம் மட்டுமே. ஒரு தேசிய எழுச்சியில் ,அதன் பெருமை போராட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கருத்துக்கள், சிந்தனைகள் பெருக்கெடுத்து வெளிப்பட்டு பல நூல்களாக வெளி வர வேண்டியது மிக முக்கியம். எனவே இந்த நோக்கில் இன்னும் சொல்லப்பட வேண்டிய செய்திகள் நிறையவே உள்ளன. என்றாலும் இந்த மட்டுமாவது கருத்துக்கள் மக்களைச் சென்றடையட்டும் பிறகு போகப் போக மற்ற செய்திகளை பார்ப்போம் என்கிற அளவில் இப்போதைக்கு இதை மட்டுமே தாங்கி வெளிவருகிறது இந்நூல்.
எழுத்தாளர் இராசேந்திர சோழன் (பிறப்பு டிசம்பர் 17, 1945) (மற்ற பெயர்கள்: ராஜேந்திர சோழன், அஸ்வகோஷ், அஸ்வகோஸ்) தமிழ் எழுத்தாளர். மார்க்ஸிய பார்வை கொண்டவர். பின்னர் தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப்பார்வை என மாற்றிக்கொண்டார். வடதமிழகத்து அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகளில் ஒருவர். அடித்தள மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் பாலுணர்ச்சிகளின் அடிப்படையில் எழுதியமையால் விவாதங்களுக்கு உள்ளானவர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும்; அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர்.
இப்புத்தகம் இந்திய நாட்டைப் பற்றியும் திராவிட அரசியலையும் தமிழ் தேசியத்தையும் மூலமாய் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. ஒரு நாடு என்பது யாது ஒரு தேசம் என்பது யாது என்பதை பற்றி ஆசிரியர் கூறியுள்ள வேறுபாடு அறிந்து கொள்ளக் கூடிய ஒன்று மற்றும் மத்திய மாநில அரசின் உரிமைகள் பற்றி தெளிவாய் இந்நூல் குறிப்பிடுகிறது... இதன் மூலம் மாநில அரசின் அதிகார வரம்புகள் பற்றியும் மத்திய அரசின் அதிகார வரம்புகள் பற்றியும் ஒரு புரிந்துணர்வு ஏற்படும்... தமிழகத்தின் நிலையைப் பற்றி முழுவதுமாக எடுத்துரைக்கும் என்னும் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து அதற்கு காரணத்தையும் சில பிரச்சினைகளின் தீர்வையும் எடுத்துரைப்பதில் சிறப்பு. மத்திய அரசுகள் மாநில அரசின் மீது எவ்வாறு ஒரு ஒடுக்குமுறையான நிலையை உருவாக்கி இருக்கிறது என்பது பற்றி தெளிவு படுத்துகிறது.. பல்வேறு தமிழர் பிரச்சினையை முன்னெடுத்து அதைப்பற்றி கூறியிருப்பது கவர தக்கதாகும். புத்தகத்தின் இறுதியில் திராவிடம் பற்றி ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கதாகும். எனக்கு இப்புத்தகம் மிகவும் பிடித்த தற்கான இரண்டு காரணங்கள் 1. நான் அறிய விரும்பிய தமிழர் பிரச்சினை களையும் மத்திய அரசின் செயல்பாட்டை பற்றிய தகவல்களையும் தெளிவுற எடுத்துரைக்கின்றது. 2. திராவிடம் பற்றியும் மதம் சடங்குகள் இறைநம்பிக்கை முதலியன பற்றியும் மிகத் தெளிவாக நான் அறிய விரும்பியதை இந்நூல் எனக்கு தந்திருக்கிறது. பொதுவாக எனக்கு திராவிடம் மீது பெரும் பற்று இல்லை எனவே திராவிடர்கள் எடுத்து வைக்கும் கருத்துக்களை அறிந்து அதற்கு தகுந்த பதில்களை கூற இந்நூமல் பெரிதும் பயன்படும். கட்டாயம் திராவிடம் பேசும் அனைத்து மனிதர்களும் படிக்க வேண்டிய அவசிய புத்தகம்... இப்புத்தகத்தின் குறைகள் என்று கூற வேண்டுமானால் (குறைகள் என்று கூறுவதைவிட ஆசிரியர் கருத்துக்கள் சிலவற்றை என்னால் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது) € தமிழ் நாட்டை தன்னுரிமை தேசமாக மாற்றும் கருத்துக்கு எனக்கு உடன்பாடு இல்லை...மற்றும் தன்னுரிமையை காட்டிலும் மாநில சுயாட்சியே மேன்மையானது என்பது என் கருத்து. € புத்தகத்தின் இறுதியில் தமிழ் வழிக் கல்வியை அறிவுறுத்தும் ஆசிரியர் பிற மொழிகளை வேண்டாம் என்று அறிவுறுத்துவது எனக்கு சரியென்று படவில்லை. மிகவும் நீளமான புத்தகம் மற்றும் கருத்துக்கள் அங்கங்கு சலிப்பூட்டும் அதனால் புத்தகம் முழுமையாக முடிக்க கொஞ்சம் காலதாமதம் எடுக்கலாம் மற்றும் முதல் பாதி புத்தகத்தை விட இரண்டாம் பாதி மிகவும் கவரக் கூடிய தாகவும் இருக்கும் எனவே இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் ஆரம்பத்தில் சலிப்பு தட்டினாலும் தொடர்ந்து கொஞ்சம் படித்தால் பின்பு ஆர்வத்திற்கான பகுதியை அடைந்து விடலாம்