தென்றலின் மென் தொடுகையாய் பாலையின் நடுவே அமைந்திருக்கும் பசுஞ்சோலையாய் உள்ளுயிரை மீட்டி நினைத்தவுடன் அனிச்சையாய் இதழ்களில் புன்னகை விரியச் செய்து ஓயாத கடல் அலைகளாய் உடலோடு உயிர் உறவாடும் வரை மனம் மோதிடும் ஒரு காதல் அனைவருள்ளும் இருக்கும். அவ்வழகிய உணர்வு ஆணை தாக்கினால் அவனின் செய்ல்கள் என்ன என்று கேட்டிருப்போம் பார்த்திருப்போம். அதுவே ஒரு பெண்ணை தாக்கினால் அவளின் செயல்கள் என்ன? செழியன் அவனே கதாநாயகன். கதையின் நாயகன் மட்டுமல்ல அநேக பெண்கள் தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் காதல் கணவனின் பிரதிபிம்பம் என்றுதான் சொல்ல வேண்டும் செழியனை… செழியனோடான முதல் சந்திப்பிலேயே அவனை நோக்கி ஈர்க்கப்படுகிறாள் நம் கதாநாயகி அஞ்சனா.