‘இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே!’ அப்படி சொல்லணும்னு தான் ஆசை. ஆனால் முடியாதே! ஆம், இது கற்பனை அல்ல. இதில் வரும் முற்பாதி நிகழ்வுகள் அனைத்தும் நிஜமே!
‘சரி உண்மை சம்பவங்கள் என்றால் கதை மாந்தர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கும் அல்லவா?!’ என்றால்... இல்லை, மாற்றப்படவில்லை என்பதை விட பெயரே இல்லை! இந்த கதையில் பலர் வருவார்கள்... ஆனால் பெயரில்லாத பலர்! காரணம் தெரியவேண்டுமா? கதையை படித்துவிட்டு பின்குறிப்பில் காரணம் தெரிந்துகொள்ளலாம்.
அடுத்து... கதைக்கரு குறித்து! இந்த தொகுப்பில் அன்பு இருக்காது... காதல் இருக்காது... அழுத்தம் இருக்காது... அழுகை இருக்காது... சந்தோஷமும் இருக்காது... ஆனால் வேறேதோவொன்று நெருடும். இதுதான் பெரும்பாலானோர் எண்ணமாக இருக்கும் முடிவில்!
அடுத்து... கதை குறித்து! இது என்னுடைய சில சிறுகதைகளை கோர்த்து எழுதிய ஒரு கதை. வண்டலூரில் ஆரம்பித்து திருவள்ளூர் வரை நடக்கும் ஐந்து நிகழ்வுகள்! வினை... முக்கியமாக தீவினைகள்!
எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை இல்லாமல் இருக்குமா?!?
ஆன்மீகத்தை நம்புவோர்... ‘கர்மா இஸ் பூமரேங்’ என்பார்கள். அறிவியலை நம்புவோர்... ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு’ என்பார்கள்!
அதுதான் இந்த கதையின் மையம். வினைகளும் அதற்கான எதிர்வினைகளும் தராசில் வைத்தது போல இருக்கும். சரி, இனி கதை தொகுப்புக்கு செல்லலாம்!