செந்தீ விழுந்த செம்பொற்பாறை. இது ஒரு காதல்கதைதான். ஆனால் ஈழத்தமிழர்களின் அழியமுடியாத வடுவாகிப்போன வலிகளும் வேதனைகளும் நிறைந்த ஒரு காதல் கதை. நாயகன் கந்தழிதரன். நாயகி அம்மேதினி. இக் கதை 1990 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையான ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் நடந்த சம்பவங்களின் வெறும் ஒரு வீதமான கதையின் சுருக்கம் மட்டுமே. இதைக் காதலோடு சேர்த்துப் பகிர்ந்தளித்திருக்கிறேன். இன்னும் நேரில் கண்ட ஆயிரம் ஆயிரம் வலிகளும், மறக்கமுடியா அனுபவங்களும் அதனோடு சேர்ந்த துடிப்பும் கதறல்களும் சம்பவங்களாய் என் மனக்கிடங்கில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அவையும் கதைகளாய் ஒருகாலத்தில் உருப்பெறலாம். அவர்கள் பட்ட அவலம், வலி. வேதனை ஏராளம் ஏராளம்.