"ஒரு நாடு வல்லரசு ஆக வேண்டாம் நல்லரசாக இருந்தால் போதுமானது".இந்த புத்தகம் படிக்கும்போது நினைவுக்கு வந்தது.இந்த புத்தகம் 2009 ஆம் ஆண்டில் கேரி லீச் எழுதியது. அவர் ஒரு பத்திரிகையாளர். இந்த புத்தகம் எண்ணெய் வள நாடுகளில் அமெரிக்காவின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக எவ்வாறு தலையிடுகிறது என்பதை விவரிக்கிறது. அமெரிக்கா அந்த நாடுகளில் சந்தை பொருளாதாரத்தை ஐஎம்எஃப் மூலம் செயல்படுத்த கட்டாயப்படுத்தியது மற்றும் அவற்றை கடனாளியாக மாற்றியது பற்றியும் அமெரிக்கா எவ்வாறு அந்த நாடுகளில் இராணுவ அரசாங்கத்தை ஆதரித்தது மற்றும் மனித உரிமை மீறலை ஆதரித்தது என்றும் ஆசிரியர் உண்மைகள் மற்றும் ஆதாரங்களுடன் விவரிக்கிறார்.