"மாபெரும் சபைதனில்"
இந்தியாவின் இளம் IAS அதிகாரிகளில் ஒருவரான உதயச்சந்திரன் IAS, அவர்களின் அனுபவங்களும் அதன் சார்ந்த வரலாறுகளும், வரலாற்றின் மூலம் கண்ட தீர்வுகளையும், நேர்மையான எளிய மனிதர்களின் மாற்றத்திற்கான முன்னெடுப்புகளையும் அழகிய நடையில் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த புத்தக வாசிப்பில் மக்கள் சேவையின் மகத்துவமும், அனுபவங்களை அனுபவிக்காமல் பெற்ற அனுபவ உணர்வும், IAS ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் எழுவது இயல்பே!!
மக்கள் சேவையில் ஈடுபட போகும் நமக்கு இந்த புத்தகம் அதற்கான மனத்திண்மையை வளர்க்கும் வண்ணம் அமையும் என நம்புகிறேன்.
உதயச்சந்திரன் IAS அவர்கள் வாசித்த புத்தகங்களின் புத்தகச் சுருக்கங்கள் புத்தக வாசிப்பை தூண்டுவதாக அமைந்திருப்பது இந்த புத்தகத்தில் கூடுதல் சிறப்பு.!