முகவுரை - காலச்சக்கரம் நரசிம்மா முன்னுரை எழுதுபவரின் பணி கட்டியம் கூறி கதவைத் திறந்து விடுவது மட்டுமே. புதிய எழுத்தாளர்களுக்கு முன்னுரை எழுதும் பல எழுத்தாளர்கள், கதை தளத்தை விமர்சிப்பது போன்று, ''அக்கு வேறு ஆணி வேறாக'' ஆய்வு செய்து, கதையையே கூறி விடுவார்கள். இவரே இப்படி கூறுகிறாரே என்று வாசகர்கள் அந்த எழுத்தாளரின் முன்னுரையை மனதில் பதிய வைத்து, அந்த கோணத்திலேயே கதையை அணுகுவார்கள். இதனால் ஒரு நல்ல கதைத்தளத்தின் புரிதலின்மை வாசகர்களிடையே தோன்றி விடும். பொதுவாகவே நான் முன்னுரைகளை எழுத மறுத்துவிடுவேன். ஆனால் வித்தியாசமான கதைகள் என்றால் நிச்சயம் எனது முன்னுரை அதில் இருக்கும். நான் மீனாட்சி அடைக்கப்பனின் ''தீரா வஞ்சம் தீர வாராயோ'' என்கிற புதினத்த