நான் படித்ததில் மிகவும் உயர்ந்த ஒரு இடம் நிச்சயம் நிச்சயம் நரனுக்கு உண்டு. இப்படி ஒரு மகத்தான எழுத்தாளனை எனக்கு அறிமுகம் செய்த நண்பர்களுக்கு நான் மிகவும் . எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்பதில் எப்பொழுதுமே எனக்கு ஒரு சிக்கல் இருக்கிறது.
வாசனாதி ஒரு பூ மலர்வதற்காக பாடலை பாடி கொண்டிருக்கும் ஒரு பெண் அவளின் இறப்பு எவ்வாறு எல்லாம் மலர்களை மலரவிடாமல் தடுக்கிறது.
நீல நிறம் என்னவென்று சொல்வதே தெரியவில்லை. எழுத்தின் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு ஓவியம் அவன் வரையும் ஒவ்வொரு ஓவியத்திலும் ஏதோ ஒரு முகத்தை தனக்கு தெரிந்த முகத்தை தனக்குத் தெரியாமல் அதில் வரைந்து விட்டு செல்கிறான்.
மயில் இதெல்லாம் ஆடாத மயில் என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் ஆண் மயில் தான் ஆடும் என்றார்கள் இந்த மயில் தனிமையின் உச்சத்தில் தானும், தன்னை சுற்றியுள்ள அனைத்து பக்ஷ்களையும்,விலங்குகளையும் கொன்று விட்டு தன்னை தானே சாய்த்துக் கொள்கின்ற ஒரு விஷமரமாகவே மாறிவிட்டது.
1921 காதல் என்னவெல்லாம் செய்யும் என்னவெல்லாம் செய்ய வைக்கும் பைத்தியம் என்று தன்னைத்தானே சொல்ல வைக்கும் இந்த உலகம் கூறிக் கொள்வதை கூட ஏளனமாக பார்த்துவிட்டு அவனுக்காக எல்லாவற்றையும் துறந்து தான் இறந்த பின்பு கூட அவனை காத்துக் கொண்டிருக்கும்.
இறந்த கணவனின் உடலை சுமந்து கொண்டு செல்லும் ஒரு ஒரு பிரயாணியாக தன்னை ஆக்கி கொண்டு. ஏழு ஆண்டுகளாக படுக்கையில் மரணத்தை எதிர் பார்த்து கொண்டிருந்தவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் மழையை கண்டால் என்ன செய்வாள்? இந்த உலகை எப்படி பார்ப்பாள் ஆனந்தத்தால் நிரப்புவாள? வலிகளை எல்லாம் இன்றுடன் முடித்துக் கொண்டேன் என்ற என்ன ஓட்டத்தில் முடித்துக் கொள்வாளா? எல்லாமாகத்தான் நடைபெறும் அந்த ஒரு சடங்கு. அனுப்பு அன்பின் பரிதவிப்பு.
சிறை உட்பட ஏதோ ஒன்றை நமக்கு சொல்லித்தந்தே இருக்கிறது எழுத்தின் மீது கொண்ட மோகம் தனியாதிருக்க இவ்வெழுத்துக்களை மறுபடியும் வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இதுவரை "நரனை" போல புதுவெளியை யாரும் எனக்கு காட்டியதில்லை. வரையும்போது மாதிரியின் இடுக்கில்வரும் ரத்தபிசிறை இளஓவியன் கவனிக்கிறான்; குருட்டுப்பெண் கண்ணுக்குள்ளும் கைக்குள்ளும் பூமலர சாகிறாள்; சிற்பி ஆலய சிற்ப செதுக்களில் சிந்திய நீலத்தின் பொருட்டு புணர்கிறான்; ஓயாங் ஓயாங் என அகவி மயில்கள் தற்கொலை செய்துகொள்கின்றன; மருமகனின் உயிரணு தாங்கி, மகளின் பொருட்டு வாடகை தாயாகிறாள் அமரந்தா; இதுவரை "நரனை" போல புதுவெளியை யாரும் எனக்கு காட்டியதில்லை.
நரனை பற்றி சம்யுக்த மாயா கவிஞறின் அறிமுகத்தால் படிக்க தொடங்கியேன். சரளமாகவும் , கொஞ்சம் கடினமான நடையிலும் எழுதப்பட்ட கதைகள். 12 சிறுகதைகளின் தொகப்ப, இரண்டாம் முறை படித்ததால் அமரந்தா சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கிறேன். ஏசு இரண்டாம் இடம். நரன் தனக்கு என்று ஒரு தனி முத்திரை பதித்துள்ளார். அமரந்நா ஆனந்தவிகடனால் எடிட் செய்யபட்டது என்று நினைக்கிறேன்.