சினிமா சீக்ரெட் புத்தகத்துக்காக… “எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திருந்து டி.ஆர். மகாலிங்கம் போன்ற இசையரசர்கள் வரையிலான ஒரு காலகட்டம், சினிமா சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆட்சி செய்த எம்.ஜி.ஆர்-சிவாஜி காலகட்டம், அவர்களுக்கடுத்து சினிமாவில் நிலைத்த இடத்தைப் பெற்ற ரஜினி-கமல் யுகம் அதன்பின் இப்போதுள்ள கலைஞர்களின் காலம் என கலைஞானத்தின் திரைப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஜாம்பவானுடனும் இணைந்து பணியாற்றி அவர்களின் அன்பைப் பெற்ற ஜாம்பவனாக கலைஞானம் இருப்பதும், அவர்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்ததும் அவர் வெளிப்படுத்தும் அனுபவ வார்த்தைகளின் வாயிலாகத் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக, சாண்டோ சின்னப்ப தேவர் பற்றிய கலைஞானத்தின
அசுவாரஸ்யமாக தான் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் வாசிக்க வாசிக்க அத்தனை சுவாரசியமான தகவல்கள் புத்தகம் முழுக்க இருக்கின்றன. கலைஞானம் அவர்கள் பாகவதர் காலம் தொட்டே சினிமா பரிச்சயம் உள்ளவர் என்பது புத்தகத்தை வாசிக்கும் முன்பு வரை தெரியாது. சினிமா பார்ப்பதற்காக திரையரங்கில் முறுக்கு விற்க தொடங்கிய சிறுவன் சினிமாவின் மாபெரும் ஜாம்பவான்களோடு பணிபுரியும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்பது அவர் மேலும், அவரது திறமை மேலும் மரியாதையை அதிகரிக்கின்றன.