‘ஸி. ஐ. டி. சந்துரு’, முதல் வரி தொடங்கி கடைசி வரி வரைக்கும் குறையாத விறுவிறுப்புடன் வாசகர்களைக் கட்டிப்போடும்சுவாரசிய-மான துப்பறியும் நாவல். தேவனுக்கே உரித்தான ஓட்டமான நடை, அழுத்தமான வசனங்கள் இந்த நாவலின் சிறப்பு. சாகசம், சாமர்த்தியம், சவால் என பக்கத்துக்குப் பக்கம் எகிறும் எதிர்பார்ப்புபுத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாது.
தேவன் அல்லது ஆர். மகாதேவன் பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.
இரண்டு பாகம். ஒரு கார்ட்டூன் (Donald Duckனு நினைக்கிறேன்) எபிசோடுல ஒரு வாத்து வைத்திருக்கும் பையில் என்ன இருக்கிறதென்று மற்ற வாத்துக்கள் பார்க்க முயற்சிக்கும். ஆனா கிளைமாக்ஸ்ல தான் அதுல THE ENDனு கார்டு இருக்கிறது தெரியும். அது போல இந்த கதையும் ஒரு பையை சுற்றியே நடக்கிறது. நீண்ட நெடுந்தொடரை பார்த்த அனுபவத்தை தருகிறது.(சங்கர்னு ஒரு கதாபாத்திரம். அவரை நான்கு முறை கடத்துகிறார்கள்) முதல் பாகம் முடிந்ததும் எப்படா முடியுமுன்னு தோணுது.
சிறப்பான ஒரு மர்ம நாவல்... ஒரு பை காணாமல் போய், அதைத் தேடும் படலமும் அதில் என்ன இருந்தது என்ற மர்ம முடிச்சுடனுடன் விறுவிறுவென பயணிக்கும் ஒரு கிளாசிக் நாவல்...