பெயரளவில் இல்லாமல், திரைக்கலை சார்ந்து, ஞானத்தை முலைப்பாலாய் யாரும் ஊட்டாமல், கலைப்பாலாய் தன் அனுபவத்திலிருந்து தானே கறந்து, தன் அயராத உழைப்பால் புட்டியில் நிரப்பி பெத்தடின் மருந்தாய் தனக்குத்தானே புகட்டிக் கொண்டவர். எழுபதில் எழுவதே சிம்மசொப்பனம் (உட்கார்ந்து விட்டால் எழுப்பிவிட ஏழு பேர் தேவை) இவரின் 70+இல் கதை என்று சொல்லிவிட்டால் போதும், கலிவுக்கும் தைலியிக்கும் நடுவில், இவரது அனுபவங்கள் சீறிக் கிளம்பி சிவ தாண்டவமே ஆடும்.
முதல் பக்கத்தில் தொடங்கும் சுவாரசியம் கடைசி பக்கம் வரை தொடர்வது தான் புத்தகத்தின் ஆகப் பெரும் பலம். சங்கிலித் தொடராக வாசகரின் ஆர்வதைத் தூண்டும் திரைத்துறை சார்ந்த ரகசியங்களை, தகவல்களை அளித்துக் கொண்டே செல்கிறார் கலைஞானம் அவர்கள். சினிமா விரும்பிகள் தவறவிடக் கூடாத புத்தகம்.