கிறிஸ்தவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை இந்நூல் விளக்குகிறது.. அப்படி என்ன தொண்டுகளை அவர்கள் செய்தார்கள் ? தொல்காப்பியரின் காலத்தில் இருந்து பயன்படுத்திவந்த எழுத்து முறைக்கு ஒரு புதிய வடிவம் கொடுத்தார் வீரமாமுனிவர். உரைநடையை வழங்கியவரும் அவரே அதோடில்லாமல் தமிழுக்கு அகராதியை முதன் முதலில் கொடுத்தவரும் அவரே. ஒரு முழுநீள நகைச்சுவை நூலை முதன் முதலாக வெளியீட்டவரும் தையரிநாதர் என்றழைக்கப்பட்ட வீரமாமுனிதான். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் வேதநாய பிள்ளை என்ற கிறிஸ்தவரால் அருளப்பட்டது. இந்தியாவின் அச்சு நூல்கள் முதன் முதலாக தமிழில் தான் அச்சேற்றப்பட்டன அதற்க்கு காரணமும் கிறிஸ்தவ தமிழ்த்தொண்ர்கள் தான்.