41 வயதிலேயே ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிக் குவித்து, கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் தம்பி நா.முத்துக்குமார்.கடந்த பத்து ஆண்டுகளாய், தமிழ்த் திரையுலகில் அதிகப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையையும் தன் தகுதியால் தக்கவைத்துக் கொண்டவர் அவர். இரண்டு தேசிய விருதுகளை அடுத்தடுத்துப் பெற்றவர். இப்படி எண்ணற்ற புகழ் மகுடங்கள், தன் தலைமீது ஏறியபோதும், கர்வத்தைத் தன் தலையில் கொஞ்சமும் ஏற்றிகொள்ளாமல் எளிமையாய் வாழ்ந்தவர் முத்துக்குமார். அதனால்தான் அவரது நட்புலகம், ஏகத்துக்கும் விசாலமாக விரிந்திருக்கிறது.
தமிழ் இலக்கியக் உலகில் தோன்றியக் பெரும் கவிஞனை பற்றியக் நினைவு தொகுப்பு..அவனோடு இணைந்து பட்டாம்பூச்சி விற்று உடன் பயணித்து வேடிக்கை பார்த்தவர்களின் நினைவுகளும் கண்ணீர் மழை துளிகளும்.