கண்ணன், மீரா இருவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி கொண்டிருந்தனர். மீரா வெளியில் வேடிக்கை பார்த்தபடி வர... கண்ணன் அவளைத் திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தான். இன்று எப்படியும் தனது மனதினை அவளிடம் வெளிப்படுத்தி விட வேண்டும் என்று அவன் எண்ணி கொண்டான். ஏதோ ஒரு பாட்டைச் சீழ்க்கை அடித்தபடி அவன் உற்சாகமாகக் காரை ஓட்ட... அவனை ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்த மீராவிற்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. காரில் இருந்து இறங்கியவர்கள் வீட்டினுள் நுழைந்தனர். அங்கு வரவேற்பறையில் கண்மூடி சாய்ந்திருந்த யசோதாவின் இருமருங்கிலும் இருவரும் அமர்ந்தனர். "அம்மா, விருதை பாருங்க." என்ற கண்ணன் அவரது கரம் தொட்டு அசைக்க... அது சில்லென்று குளிர்ந்தது.