வணக்கம் வாசகப்பிரியர்களே! இந்த "வெண்ணிற நிழல்கள்" என்னும் குறுநாவல் கடந்த ஜூலை 2019ல் அக்ஷயா பதிப்பகத்தின் மூலம் மாத இதழாக வெளிவந்தது. கதையினைப் பற்றி : கற்பனைகளுக்கு ஏது எல்லை? நாம் அனைவரும் எத்தனை விதமான கற்பனைகளை நினைவு தெரிந்தது முதல் செய்திருப்போம்? உதாரணத்திற்கு, 'மேகத்தில் நம் முக உருவம் வந்தால்?', 'சுவற்றினுள் நம்மால் நுழைய முடிந்தால்?', 'நாம் நினைத்த இடத்திற்கு நம்மால் நொடியில் பயணிக்க முடிந்தால்?' அனைத்துமே கற்பனையில் மட்டுமே சாத்தியம் அல்லவா! இப்பொழுதும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு ஒரு சிறு கற்பனை உலகத்திற்கு உங்களை அழைத்து செல்ல விரும்புகிறேன். இந்த கற்பனைகளையும் அவ்வப்பொழுது நாம் செய்வதுதான். 'இறந்த பின்னாலான உலகம் எப்படி இருக்க