சந்திரபாவனத்துக்கும் சந்திரவதனா வுக்குமான தொடர்பும் அதன்சார்த்த suspense மற்றும் காதல் கதை ...
அரண்மணை பெரியவர் தில்லையம்பதி அவர் சுயமாய் சம்பாரித்த சொத்துக்களின் பொறுப்புக்களை அவருடன் இருக்கும் அண்ணன் தங்கை குடும்பங்களுக்கு கொடுக்காமல் அவர் கூட்டி வந்த சந்திரவதனா என்ற பெண்ணுக்கு ஏன் கொடுக்கிறார் ???
அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?? வதனாவை யார் கொல்ல பார்கிறார்கள்??? பெரியவருக்கு சந்திராவுக்குமான தொடர்பு என்ன ??? போன்ற கேள்விக்கான முடிச்சை கதையின் போக்கில் விடுவிக்கிறார் ஆசிரியர் ....கதை தோய்வில்லாமல் விறுவிறுப்பாக செல்வது சிறப்பு ..
சில இடங்களில் கதை கொஞ்சம் அழுத்தம் குறைவாக உள்ளது என்பது என்னுடைய கருத்து...
விஷ்ணுவர்மன் ... ஒரு சிறந்த காதலன் காதலி பிரிந்ததற்கு ஒரு வலுவான காரணம் இருக்கு என்று நம்பி அவளுக்கு கடைசிவரை துணையிருப்பது அருமை...
ராஜா ரத்னவேல் ஒரு கயவன் இதுபோன்ற மிருகங்கள் இருக்கும் வரை பெண்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ்வது கஷ்டம்.. overall very good story .. வாழ்த்துக்கள்💐💐