நாயுடுவை ஏன் எடிசனோடு ஒப்பிட வேண்டும் ?. எடிசனுக்கும், நாயுடுவுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே சமுதாயத்துக்கு ஒப்பற்ற சேவை செய்தவர்கள். பள்ளிக்கல்வியை பெறாதவர்கள் ஆனாலும் மனித குலமேம்பாட்டிறக்காக பல கண்டுபிடிப்புகளை செய்தவர்கள். பெரும் தொழில் அதிபர்களாக விளங்கியவர்கள். இப்படி பல ஒற்றுமைகளை சொல்ல்லாம் ஆனாலும் இவர்கள் இருவர்க்கிடையே ஒரே ஒரு வேற்றுமை தான் உண்டு எடிசன் புகழப்பட்ட அளவுக்கு நாயுடுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. ஒரு வேளை நாயுடு ஐரோப்பிய நாடுகளில் பிறந்திருந்தால் அவருக்கும் அந்த முக்கியத்தும் கிடைத்திருந்திருக்கும். நாயுடுவின் வாழ்க்கை முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும்.