பச்சைக் கம்பளி விரித்து வரவேற்கும் வயல்கள், ஊரின் எல்லையில் இருந்து வயல் வரப்புகளிலேயே நடந்து அந்த ஊரைச் சுற்றி வந்துவிடலாம்.......... அப்படி ஒரு அமைப்பு.
ஊரைச் சுற்றி ஓடும் வாய்க்கால், ஊரின் ஈசான பக்கம் ஓடும் ஆறு என அந்த இடத்தை ஒரு தீவாகவே எண்ண வைக்கும்............................................................... அகன்…. அகன்…..", நதியாள் அழைத்தபடியே இருந்தாள்.
அவன் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தான்.
"நீ வரமாட்டியா… போ நான் வெளிய போறேன் ",என தனக்கு கொடுக்கப்பட்ட ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு எழுந்தாள் நதியாள்.
அகரன் கோபம் வந்து அவளை அப்படியே தூக்கி பெட்டில் படுக்கவைத்து கதவைப் பூட்டி சாவியை தன்னிடம் வைத்துக்கொண்டான்.
"விடு … நீ வரலல்ல… நான் போறேன்….சாவி குடு",என கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளின் செய்கை அவனுக்கு பள்ளி செல்லும் நதியை நியாபகப்படுத்த அவன் மென்னகை புரிந்தான்.
"ஏன்டா சிரிக்கற? சாவிய குடு. நான் வாக்கிங் போகணும்", என மீண்டும் முறைத்தாள்.
"இந்த கால வச்சிட்டு வாக்கிங் ஒன்னு தான் குறைச்சல் உனக்கு. கம்முனு படு டி", என அவள் அருகிலேயே அவளின் இடையை அணைத்தபடி உறங்கினான் அகரன். ...........................................