Jump to ratings and reviews
Rate this book

தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்

Rate this book
இந்நூல் எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய மதிப்பிற்குரிய நண்பராகிய நாஞ்சில்நாடனைப்பற்றி எழுதியிருக்கும் ஆளுமைச்சித்திரம். நாஞ்சில்நாடனை மூத்த உடன்பிறந்தவரைப்போல் நினைக்கும் ஜெயமோகன் அன்புடனும் கேலியுடனும் நுட்பமான சித்தரிப்புடனும் அவரைப்பற்றி இந்நூலில் விவரிக்கிறார். சிரித்துக்கொண்டே வாசிக்கத்தக்க இந்நூல் மெல்லமெல்ல யதார்த்த உணர்வுகொண்ட, அன்பான ஒரு மனிதரையும் கூர்மையான கவனிப்புகளும் நகைச்சுவை உணர்வும் சமூகப்பிரக்ஞையும் கொண்ட ஓர் எழுத்தாளரையும் அறிமுகம் செய்கிறது

61 pages, Kindle Edition

Published January 1, 2020

9 people are currently reading
25 people want to read

About the author

Jeyamohan

208 books867 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
41 (67%)
4 stars
15 (24%)
3 stars
3 (4%)
2 stars
1 (1%)
1 star
1 (1%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Thangavel Paramasivan.
47 reviews9 followers
December 18, 2020
நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை. முன்னர் வாசித்த செல்வேந்திரனின் பாலை நிலப்பயணம் நூலில் அவரைப்பற்றிய சில குறிப்புகள் என்னை கவர்ந்தன. அதிலிருந்து தற்செயலாக இந்த புத்தகத்தை கண்டடைதேன். இது நாஞ்சில் பற்றிய ஜெயமோகனின் நினைவு குறிப்புகள், அனுபவங்கள், அவதானிப்புகள் அடங்கிய கட்டுரை தொகுப்பு, நக்கலும், பகடியும் பக்கத்துக்கு பக்கம் நிறைந்திருக்கும் நூல் இது.
கமண்டல நதி - நாஞ்சில் நாடனின் புனைவுலகு புத்தகத்திலிருந்து ஒரு பகுதி என்று நினைக்கிறேன்.
உணவில் தான் அவருக்கு என்ன ஒரு முடிவற்ற ரசனை, ஈர்ப்பு!
நாஞ்சிலின் எதார்த்தவாத எழுத்துக்களை வாசிக்க ஆர்வமுடன் இருக்கிறேன், சூடிய பூ சூடற்க ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.
Profile Image for Subalakshmi Mohanrarj.
110 reviews3 followers
July 4, 2024
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களைப்பத்தி ஜெயமோகன் எழுதிய புத்தகம் இது. இவர் "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்புக்காக 2010ல சாகித்ய அகாடமி விருது வாங்கி இருக்காரு. நாஞ்சில் நாடன் புத்தகங்கள் நான் படிச்சது இல்லை ஆனா அவரைப்பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். சுந்தர ராமசாமி வீட்ல வச்சுதான் முதல் முறை நாஞ்சில் நாடன் அவர்களை ஜெமோ சந்திச்சு இருக்காரு. அவர்களுக்குள்ள இருக்க நெருங்கின பந்தம் எழுத்துல தெரியுது.

அவரோட குணாதிசயங்களையும், பேச்சு முறையையும், சாப்பாட்டுப் பிரியத்தையும், இசை ரசனையையும், குழந்தைகள் மேல் வச்சிருந்த பாசத்தையும், பயணத்தின்போது பெட்டி அடுக்கி வைக்குற அழகையும், இளகின மனசையும் பத்தி இதுல தெரிஞ்சுக்கலாம். கன்னியாகுமரி slangல இருக்கு எழுத்து நடை.

கடைசி 2 அத்தியாகங்கள் அவரோட 60வது கல்யாணம் அப்புறம் 60 வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் விவரங்கள். 

எல்லாம் okay ஆனா 3 இடத்துல பெண் பிரபலங்களைப் (முக்கியமா நடிகை நளினி) பத்தி எழுதி இருக்க விதம் முகம் சுளிக்க வைக்குது. நாஞ்சில் நாடன் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைச்சா இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
January 25, 2018
எழுத்தாளர் நாஞ்சில் நாடனைப் பற்றி ஜெயமோகன் எழுதியுள்ள சிறிய கட்டுரைத் தொகுப்பே இந்நூல்.
5 reviews1 follower
September 30, 2020
Nice

நாஞ்சில் நாடன் அவர்களை பற்றி அறிய பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார் ஜெயமோகன் அவர்கள். அவருடைய மொழி நடையில் சொல்லி இருப்பது இன்னும் சிறப்பு

மிக நல்ல படைப்பு
Profile Image for Santhosh Kumar K.
11 reviews
March 14, 2021
Short and sweet read!!!
Must-Read for the people who read, admire and follow Nanjil Nadan's Works. Casual and genuine account about Nanjil Nadan by Jeyamohan.
Displaying 1 - 5 of 5 reviews