எதிர்பாராமல் வாழ்க்கையில் வஞ்சிக்க படும் நாயகி, முற்றிலும் முரண்பாடான ஒரு சூழலில் நாயகனை சந்திக்கிறாள். அவளது வாழ்வின் ரகசியம் அறிந்து அதிர்ந்து போகும் நாயகன் அவளது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து எந்த ஒரு சூழலிலும் காதலை விடாது பிடிவாதமாக அவளை கை பிடிக்கும் கதை.
பெண்பிள்ளைகள் சமுதாயத்தில் சீரழிக்கப்படுவது பலவகைகளில் என்றாலும் தனக்கான குடும்பம் இல்லாது போவது மிகப்பெரிய அவலமே. துன்பத்தில் துவளும் போது தோள் கொடுக்கவோ இல்லை அந்தத் துன்பமே வராமல் தடுப்பதற்கோ தனக்கான மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தேவை.
இம்மாதிரியான கதைகள் எழுதப்படும் முறையை ஒற்றியே கவனத்தை ஈர்க்கும்.
பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுமி சமுதாயத்தில் சில தவறான நபர்களால் சீரழிக்கபட்டு சமுதாயத்தில் அடையும் அவமானங்களையும் தடைகளையும் தாண்டி வாழ்வில் பாதிப்பை இந்நூல் கூறுகிறது.
Hi janani sis, very nice story. Romba ganamana subject. Ana romba easy ah kondu poi erukeenga. Romba bold ana ponna samyuva katti erukeenga. Very nice story.