முதல் பாகத்தில் கதாநாயகி வீம்பாக இருக்க இரண்டாம் பாகத்தில் அந்த வேலையைக் கதாநாயகன் ஏற்றுகொள்கிறான்.
கதாநாயகனுக்கு முதல்பாகத்தில் வந்த இதயநோய்க்கு அவன் மனஉளைச்சல் தான் காரணம் என்று இரண்டாம் பாகத்தில் அதை முடித்து வைக்க, நிஹாசினியின் உணர்வோடு அவன் விளையாடுவது தான் இந்தப் பாகம் முழுவதும், கதாநாயகன் என்று சொல்லுவதற்காகத் தவிப்போடு விளையாடுகிறான் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கிறது. அது போதும் போலக் குடும்ப வாசகர்களுக்கு...
திரும்ப ஒரு மேட்டர் முடிக்கவா இவ்ளோ அக்கபோர் என்று கேட்க வைத்துவிடுகிறது பக்கங்களின் எண்ணிக்கையும் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதி இருப்பதைப் படிக்கும் போது.