திரு கிரேஸி மோகனின் எழுத்தின் சக்தியைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நம்முள் இருக்கும் குழந்தையைத் (inner child) தன் நகைச்சுவையால் தட்டியெழுப்பிவிடும் ஆற்றல் கொண்டவர். அந்தக் குழந்தையுள்ளம் தான் நம்முளே இறைவன் வாழுகின்ற ஆலயம். வருத்தம் தொடாத, யாரையும் வருத்த எண்ணாத வாய்விட்ட சிரிப்புத்தான் அந்த இறைவனுக்கு நாம் புரிகின்ற சிறந்த வழிபாடு. அந்த அன்பு சகோதரர்க்கு என்னுடைய சிரந்தாழ்ந்த அஞ்சலிகளைச் செலுத்துமுகமாகவே அவருடைய பாணியில் இந்த நாடகத்தை எழுதியிருக்கிறேன். கிரேஸியும் கிரேஸி படைத்த மாதுவும் இவ்வுலகிற்கு அளித்திருக்கும் சிரிப்பு என்ற கொடை அனந்தம். அதற்கு என்னுடைய நன்றியின் சிறிய வெளிப்பாடே இந்நாடகம். அத்துடன் நான் குடும்பத்துடன் கண்டĬ