கவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீனத் தமிழ்க் கவிதையில் இவ்வியல்பை வழுவாது கடைபிடிக்கும் கவிஞர்களில் இசையும் ஒருவர்.
இசை கவிதைகளின் பொது இலக்கணம் அவை பெரிதும் நிகழ்காலத்தையே சார்ந்திருக்கின்றன என்பதே. நிகழ்கால மனிதர்களின் அவலங்கள், ஆனந்தங்களை நிகழ்கால உணர்வுடன், நிகழ்கால மொழியில், நிகழ் தருணச் சொற்களில் வெளிப்படுத்துகிறார். இசையின் இதுவரையான கவிதைத் தொகுப்புகளில் காணும் இந்தப் பொது இலக்கணத்துக்கு ஐந்தாவது தொகுப்பான ‘ஆட்டுதி அமுதே!’ புதிய சேர்மானத்தை அளிக்கிறது. பழந்தமிழ்ச் செவ்விலக்கியங்களின் நுட்ப உணர்வையும் மொழியையும் சொற்களையும் இத்தொகுதியிலுள்ள கவிதைகள் மீட்டெடுக்கின்றன. பொன்னைப் புடமிடும் இந்தச் செயல்பாட்டில் தொகுதியின் கவிதைகள் மேலதிகப் பொலிவையும் ஆழத்தையும் பெறுகின்றன.
Isai is a modern tamil poet who assures us of the uniqueness of poetry among other literary forms. A well known and critically acclaimed poet of our times, this is his fifth poetry collection. Isai’s poems are of present day human tragedies and mirth, in the emotions, voices and words of present. Instead of making it into his cliché, Isai gives a new meaning to this with each new book. He revives the nuances of tamil classic literature, the words and ideas. In the mirror of his unique language, a blend of classics and modernity, isai shows our own world in unprecedented perspectives.
1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகினார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.
Isai is my recent favorite poet. The glimpse that it offers into the minutae of life , pretty much like Devathachan, is what makes all these poems very special to me. I am not good enough with words to express elaborately but to put it simply I like it.