ஈரோடு கதிர் அவர்கள் ஒரு மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளராக தான் செய்யும் பணியில் சந்திக்கும் மனிதர்களை குறித்து அவர்கள் ஊடாகவே அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை சொல்லிச் செல்கிறார் . இந்த புத்தகம் புதிய தலைமுறை இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்று முன்னுரையில் தெரிவிக்கிறார் . இன்றைய இளம் தலைமுறையினர்க்கு உற்சாகமளிக்கும் நல்ல ஒரு கையேடு . மற்றும் அவர்களுடன் பயணிக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கும் நல்ல வழிமுறைகளை தந்துள்ளது குறிப்பிட தக்கது .
வழக்கமான தன்னம்பிக்கை நூல்களிலிருந்து வேறுபட்டு தனித்துவமாகத் திகழ்கிறது. சிறப்பான புத்தகம். பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.