எதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோமோ அது பொய்த்துப் போகும் போது உடைந்து விடாமல் அரவணைத்துச் செல்லும் கைகளே பற்றுக் கோலாகும்.
கவுதமிடம் வேலைக்குச் சேர்ந்த உதயாவை கிடைக்கும் நேரத்தில் மனம் போல வாழலாம் என்று போதிக்கிறான்.
நிலையான வாழ்வு, ஒருவருக்கு ஒருத்தர் என்ற கோட்பாட்டில் இருப்பவள் அவன் பேச்சை எல்லாம் கேலி என்ற வட்டத்தில் அடைத்து விடுகிறாள்.
தன் நிலையில் நிலையாக இருக்கும் உதயாவை குடும்பத்தில் உள்ளவர்களே தவறாக நினைக்கும் போது மனதில் காயப்பட்டுக் கதறுபவளுக்கு ஆறுதல் அளிக்கக் கவுதமின் கரமே நீள்கிறது.
உதயாவில்பால் ஈர்க்கப்பட்டிருக்கும் கவுதம் அவளை மனைவியாக்கி மனதில் இருக்கும் காயத்தைப் போக்குகிறான்.