ரகுநந்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா பாடல்களும் அனுவிற்கு ஏதோ செய்தி சொல்லும்படி இருந்தது. அவளுக்கும் புரிந்தது. ஆனால் அது போதாதே. நித்யாவுடன் அவனுக்கு இருந்த உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ளாத வயது இல்லையே அவனுக்கு இப்போது. அந்த அனுபவம் அவனுக்கு ஒரு தெளிவை கொடுத்திருக்க வேண்டுமே. அந்த தெளிவுடன் அவன் சொல்ல வேண்டும். அவன் வாயால் அவன் உணர்வுகளை தெளிவாக சொல்ல வேண்டும். சொல்லட்டும். பார்ப்போம். பொறுத்திருப்போம்