''நானே கடவுள்'' என்று அவ்வப்போது நடுத்தெருவில் நின்று நான் நவில்வது உண்டு. இமை விரித்துப் புருவம் நெறித்து ''நீ எப்படிக் கடவுளானாய்?'' என்று கேட்போரிடமெல்லாம் ''நீவிர் நம்புகிற பிறிதொரு கடவுளிடம் இதே கேள்வியைக் கேளும். அவர் பதில் சொன்னால் நானும் சொல்வேன்'' என்பது என் பதிலாக இருக்கும். மனிதன் மனிதன்தான்; மரணிக்கும்வரை அவன் மனிதன்தான். ஆனால் இங்கு..... சிலர் சிலரைக் 'கடவுளின் அவதாரம்... நடமாடும் கடவுள்' என்கிறார்கள். நீங்களும் நம்புகிறீர்கள். ''நான் கடவுள்..... நானே கடவுள்'' என்றால் நம்பமாட்டீர்களா என்ன? ''நீ கடவுள் என்றால்... உன்னை நேர்ந்துகொண்டால்... அது நிறைவேறுமா?'' என்று கேட்கிறீர்கள்? ''ஆம்...ஆம்'' என்பதே என் பதில்.